Saturday, August 13, 2011

வாழைச்சேனையில் மர்ம மனிதன் கைது

வாழைச்சேனை பிரந்துருச்சேனை கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு புகையிரத நிலையத்தில் நடமாடிய ஒருவரை 'மர்ம மனிதன்' என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் அடையாளம் காட்டியதனை அடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு வாழைச்சேனை பிரந்துருச்சேனையில் மர்ம மனிதனின் நடமாட்டம் இருந்ததாக செய்தி பரவியதைத் தொடர்ந்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.


இதன்போது அங்கு நடமாடிய மர்ம மனிதர்கள் எனக் கருதப்பட்ட இனந்தெரியாத நபர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து நடமாடிய மர்ம மனிதன் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் - இராணுவத்திற்கு அடையாளம் காட்டியுள்ளனர். இராணுவத்தினர் அவரை அனுப்ப முற்பட்டபோது மக்கள் ஆத்திரமடைந்ததுடன் பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடி புகையிரதத்தை மறித்துள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்தவரென தன்னை அடையாளப்படுத்திய குறித்த சந்தேகநபர் - தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் அவர் வெலிக்கந்தைக்குச் செல்வதற்கு பயணச் சீட்டு எடுத்ததை அடுத்து மேலும் குழப்பமடைந்த பொதுமக்கள் - சித்தாண்டி இராணுவ படை பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு சென்ற பொலிஸார் சந்தேகநபர் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர் என்பதால் பொதுமக்களிடமிருந்து குறித்த சந்தேகநபரை பாதுகாக்கவும் மேலதிக விசாரணை மேற்கொள்ளவென கூறி வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனை பிரதேசத்தில் சிறு பதற்றநிலை ஏற்பட்டது.

Monday, July 25, 2011

தற்போது இத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

அன்பார்ந்த நண்பர்களே... தற்போது இத்தளம் http://www.firows.tk/ எனும் முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுப்பொலிவுடன் இத்தளம் இயங்குறது. தொடர்ந்தும் உங்களது ஆதரவினை எதிர்பார்க்கின்றன்றேன். இதை உங்களது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்...


புதிய தளத்தின் முகவரி:

Tuesday, July 19, 2011

தண்ணீர் டாங்கி மனிதன்

தான் குடித்த ஒரு போத்தல் தண்ணீரை மீண்டும் வாயிலிருந்து கொப்பளித்து அதே போத்தலில் நிரப்புகிறார் இந்த விந்தை மனிதன். பின்னர் மீண்டும் அந்த தண்ணீரைக் குடித்து கொப்பளித்து பல்துல்கி, வாய், முகம், கால் கழுவுகிறார்.



வீடியோ மூலம் : www.paristamil.com

ஒரு நகரமே கமெரா லென்ஸுக்குள்! - (உலகின் மிகப்பெரிய புகைப்படம் இது தான்)



உலகில் முதன் முறையாக, 111 கிகா பிக்க்ஷல் கமெரா கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைக்கொண்டு, 'செவிலி' (Seville) எனும் ஸ்பெயின் நாட்டின் நான்காவது மிகப்பெரிய நகரின் அழகை புகைப்படமாக எடுத்தார்கள்.

கடந்த டிசெம்பரில் இருந்து, இது தான் உலகின் மிகப்பெரிய புகைப்படமாக இருக்கிறது. ஆனால் அண்மையில் தான் வெளியிட்டார்கள்.

613,376 x 181,248 Pixel நீள அகலம் கொண்ட இப்புகைப்படம், கிட்டத்தட்ட 9,750 படக்கோர்வைகளை கொண்டுள்ளது. நகரின் 60 மீற்றர் உயரத்தில் Torre Schindler எனும் இடத்திலிருந்து இப்புகைப்படத்தை எடுத்துள்ளார்.

Sevilla 111 Gigapixels என இந்த புகைப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதனை யாரும் கடதாசியில் அச்சடிக்க (Print) விரும்பினால் இரண்டு காற்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு (13,800 சதுர அடி பரப்பளவு) கடதாசி கொண்டு வாருங்கள் என்கிறார்கள்.

ஏற்கனவே இப்புகைப்படத்தை பற்றி பலர் அறிந்திருக்கலாம். இன்னமும் பார்த்திருக்கவில்லை என்பவர்கள் இந்த லின்கில் சென்று பார்வையிடலாம்.

http://www.sevilla111.com/default_en.htm

முடிந்தளவு ZOOM in Zoom out செய்யலாம்.

இன்னுமொரு கொஞ்ச நாட்கள் பொருத்திருங்கள். கைத்தொலைபேசியிலும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டுவந்து விடுகிறோம் என்கிறார்கள் இதையெடுத்த புகைப்பட காரர்கள்.

இவ்வளவு பெரிய புகைப்படத்தை எடுத்த அந்த 111gigapixel camera இது தான்!

Saturday, July 16, 2011

உப்புக் கண்ணீர்


விம்மினால் நெஞ்சு
வெடித்துபோகும் அளவிற்கு
வெஞ்சங்கள்...
உப்புக்கல்லுக்குள் வைரம் தேடும்
நயவஞ்சகர்களின் துரோகங்கள்...
இடிவிழும் ஏமாற்றங்கள்...
தேடிவந்த தோல்விகள்...
இவைகளைக் கண்டு தாளாத
என் கண்கள் நன்றியுணர்வோடு
வடிக்கின்றன உப்புக் கண்ணீரை

- முஹம்மட் பிறவ்ஸ்

ஒற்றைக்காலில் தவம் செய்யும் மரம்


நாசுக்காக எமக்கொரு தினம்
விறகுக்காக எமை ஒடிக்கிறது சனம்...
சூழல் சமநிலை பேணுகிறோம் நாங்கள்
பிதற்றிக் கொள்கிறது விஞ்ஞான உலகம்

மிருகங்களின் இயந்திரங்களில் அரைபட்டும்
எமக்கு சுரணை வரவில்லை
சுயநலமுள்ள மனிதர்களில்லையே - நாங்கள்
வெறும் மரமட்டைகள்தானே..!

வெயிலுக்கு உறைக்கும்போது மட்டும்
நாம் தேவை - உயிரோடு
எம் பசுங்குருதியை மட்டும் தேவை
சுகபோக வாழ்விற்க்கு...
மாடமாளிகைகளுக்கு தேவை நாங்கள்
உயிரற்ற ஜடங்களாக...

மழைக்காக மல்லுக்கட்டுகிறது
மனித சமுதாயம்...
அதற்கு நாங்கள் ஜீரணிக்கவேண்டும்
மனிதர்கள் ஏன் எங்களைப் புறக்கணிக்க வேண்டும்???

நாம் நமக்காக வாழ்வதில்லை
சாவதற்காக வாழ்கிறோம்...
மனித கல்லறைகளுக்குக்கூட-நாம்
மனிதாபிமான உதவிகளைச் செய்கிறோம்

எங்களை அழகாக இருக்கவிடுவதில்லை
இந்த மகளிர் கூட்டம்
உன்னழகைவிட என்னழகு மிகையானது
என்கின்ற பெண்ணில் கூந்தலில்
பவ்வியமாக இருக்கிறது-மல்லிகை

பெண்ணின் பெயர்தொட்டு
கல்லறை சமாதிகள் வரை
எம் வாழ்வு மனிதர்களுக்கு சமர்ப்பணம்
மனிதன் எமக்கு எமனாக இருந்தாலும்‌கூட...

- முஹம்மட் பிறவ்ஸ்

Tuesday, July 12, 2011

பூர்வ ஜென்மத்தைப் புடம்போட்டுக் காட்டும் தெலுங்குத் திரைப்படம் "மஹதீரா''


- முஹம்மட் பிறவ்ஸ்
தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜின் அறிமுகப் படம்தான் "மஹதீரா'. தமிழில் "மாவீரன்'' என்றும் மலையாளத்தில் "தீரா'' என்றும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. பூர்வ ஜென்மத்தில் நிறைவேறாத காதல் 400 வருடங்களின் பின்னர் மறு ஜென்மம் எடுத்து நிறைவேறுகின்றது. இதுவே மஹதீராவின் கதைக்கரு.

ராஜவம்சத்தில் பிறந்த மித்ராவுக்கும் (காஜல் அகவர்வால்) அந்நாட்டின் படைத் தளபதியான பார்த்திபனுக்கும் (ராம்சரண்) இடையே காதல் ஏற்பட, இந்த காதலுக்கு வில்லனாக வருகிறார் காஜல் அகர்வாலின் மாமனா ரணவிரு (தேவ்கில்). இவரது வில்லத்தனத்தால் சிதைந்துபோன காதல் ஜோடிகள் 400 ஆண்டுகள் கழித்து மறுபிறவி எடுக்கிறார்கள். இந்த ஜென்மத்திலயாவது இவர்கள் ஒன்று சேர்வார்களா என்றால், இங்கேயும் வில்லனாக மறுபிறவி எடுக்கும் தேவ்கில் இவர்களது காதலுக்கு முட்டுகட்டையாக இருக்கிறான். இந்த சிக்கலைத் தீர்த்து எப்படிக் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இப்போது ரசிகர்கள் வாயைப் பிளந்துகொண்டு பிரமாண்டத்தையே ரசிப்பதை நன்றாகப் புரிந்துகொண்டு தீனி போட்டிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. கி.பி. 1600இல் மாவீரனாக இருந்த பார்த்திபனுக்கும் 400 வருடங்களின் பின்னருள்ள ஹர்ஷாவுக்கு முடிச்சுப்போட்டுக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். கதாநாயகன் ராம் சரண்தேஜ் (ஹர்ஷா) சீறிப்பாயும் மோட்டார் பைக்மூலம் அறிமுகத்தில் கலக்குகிறார். உயரம் தாண்டும் பந்தயத்தில் தாண்டவேண்டிய 30 அடி உயரத்தை 35 அடியாக உயர்த்தும்போது மோட்டார் சைக்கிளைக் கீழை விட்டுவிட்டு தாவி உயரத்தை தாண்டிவிட்டு தாண்டும் மோட்டார் சைக்கிளில் தாவிப் பிடித்துக்கொள்ளும் காட்சி எம்மை அறியாமலேயே கைதட்ட வைக்கிறது.

பந்தயக்காரியாக வரும் முமைத்கானுடன் சேர்ந்து போடும் குத்தாட்டத்தில் கமெராவும் கிராபிக்ஸும் சேர்ந்து விளையாடியிருக்கிறது. பாடலுக்கான இடங்கள் சூப்பர். எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியான காட்சியமைப்பை கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும். ராம்சரணின் ஆட்டணிம் அசத்தல். ஆட்டோவில் செல்லுகையில் காஜலின் கையைத் தொடும்போது "ஷாக்'' அடித்து பூர்வ ஜென்மம் நினைவுக்கு வருகிறது. பின்னர் அவளைக் காதலிப்பதாக காஜலிடமே உதவிகேட்டும் போது ராம்சரணை அலையவைக்கும் காட்சியும் கதாநாயகனின் நளினமும் ரசிக்கக்கூடிய வண்ணம் இருக்கின்றது.

மரகதமணியின் பிண்ணனி இசை பல இடங்களில் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. தீர... தீர... பாடலின் ஹம்பிங் மெய்மறக்க வைக்கிறது. இப்பாடலில் கமெராவின் உச்ச பயனைக் காட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பாடல் வரிகளை எழுதிய வாலியும் ஜெயராணிம் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். இப்படத்தில் காஜல் அகர்வால் உச்ச அழகோடு காட்டியிருக்கிறார்கள். அவருடைய இளவரசி பாத்திரம் படத்துக்கு உயிரூட்டுகிறது. கலை இயக்குநர் எஸ்.ரவிந்தரின் கைவண்ணத்தில் பிரமாண்டமான செட்கள் போடப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கும் எடிட்டிங் செய்த வெங்கடேஸ்வராக்கும் ஒரு ஓ... போடலாம்.

கால பைரவனின் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள இடம் ஹொலிவூட் உலகையே நம் கண்ணின்னாடி கொண்டு வருகின்றது. பார்ப்பவர்களுக்கே அச்சம் வருமளவுக்கு அந்தரத்தில் அந்த இடம் இருப்பது அதிரசணை. அவ்விடத்தில் 100 பேர்களைக் கொன்று குவிக்கும் வீரத்தின்மூலம் தான் ஒரு மாவீரன் என்பதை நியாயப்படுத்தியிருக்கிறார் கதாநாயகன்.
காஜலை வில்லன் கடத்திச் செல்லும்போது உயரமான கூரையிலிருந்து ஹெலியைத் தாவிப்பிடிப்பது மெய்ச்சிலிர்க்கும் காட்சி.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவு சில இடங்களில் சறுக்கியிருக்கிறது. கையைத் தொடும்போது கதாநாயகனுக்கு மட்டும் ஏன் "ஷாக்'' அடிக்கவேண்டும்? கதாநாயகிக்கு ஏன் பெண்ணின் ஜென்மம் நினைவுக்கு வரவில்லை? இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கொடுக்கவில்லை". காதலனே தனது அப்பாவைக் கொன்றதாக நம்பும் காஜலுக்கு இறுதிவரைக்கும் யார் உண்மையான கொலையாளி என்பதை கதாநாயகன் நிரூபிக்கவே இல்லை". அப்படியானால் கொலைகாரனுடன் அவள் எப்படி ஐக்கியமானாள்...?

புராதனக் கதையில் எதிரிகளின் முஸ்லிம் படைத்தலைவரான "சேர்க்கான்'' பார்த்திபன் செத்து கீழே விழும்பொழுது, "நீ காதலில் ஜெயிக்க மீண்டும் பிறப்பாயடா...'' என்று உரக்கக் கூறுகிறார். முஸ்லிம்கள் மறுபிறப்பை நம்புவதில்லையென்று இந்தக் கதாசியருக்குத் தெரியாதா... என்ன?

ஆகமொத்தத்தில் மறுபிறப்பு உண்டென்றும் சிலை ஆசைகள் அதிலேயே நிறைவேறுகின்றன என்றும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். புராதனக் கதைக்கும் நவீன கதைக்கும் மறுபிறப்பு என்றொரு முடிச்சுப்போட்டு அதை நவீனத்துவத்துடன் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார் மஹதீராவில்.

தெலுங்கு, மலையாளத் திரைப்படங்கள் மூடநம்பிக்கை, சாஸ்திரம் போன்றில்தான் அதிகமாகத் தொக்கி நிற்கின்றன. விஞ்ஞானத்துக்கே சவால்விடும் இக்கால கட்டத்தில் புராதனக் கதைகளையே திரைப்படமாக்கி எதனைச் சாதிக்க நினைக்கின்றது இத்திரையுலகம்? இதைவிடுத்து சமூகத்தின் மாற்றுக் கருத்துக்களையும் கவனத்திற் கொள்வது நன்று.
மூதாதையர்களின் நம்பிக்கைகளை அடியொற்றிப் பின்பற்றும் மக்களுக்கு நல்லதொரு திரைப்படம்.

இவ்வுலகில் உங்களுக்கு விடிவு கிட்டாவிட்டால் மறுபிறவியிலாவது கிட்டும் என்றும் இப்படத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளளும்.

Wednesday, July 6, 2011

உயிரைத் தொலைத்தேன் உன்னில் நானே...

உயிரைத் தொலைத்தேன் உன்னில் நானே...

பாடகர்: திலீப் வர்மன் (மலேசியா)

Remix By: Firows DON

Sunday, June 19, 2011

6 மாதங்களுக்கென கொடுத்த அகதிமுகாமில் 7 வருடங்களாக வாழும் சாய்ந்தமருது மக்கள்







ஒரு நேரடி ரிப்போர்ட்

- முஹம்மட் பிறவ்ஸ்

இலங்கையில் 2004இல் இடம்பெற்ற சுனாமி பேரனர்த்தத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணமே. அதிலும் குறிப்பாக மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களே அதிகமாகப் பலியானார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகினர். அவர்களில் பலர் மீள்குடியேறிவிட்டனர். ஆனாலும், இன்னும் சில குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலேயே தமது காலத்தைக் கழித்து வருகின்றனர்.

சாய்ந்தமருதில் மட்டும் சுனாமி அனர்த்தத்தில் 2010 @பர் பலியாகினர். இன்னும் பல்லாயிரக்கணக்கா@னார் அகதிகளாக்கப்பட்டனர். அண்மையில் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்தபோது இவ்வாறானதொரு அகதிமுகாக்குச் சென்றிருந்தோம். சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தின் பின்னால், கறைவாகுப்பற்று வயற்காணியருகில் ஆற்றுக்கு Œமாந்தரமாக இந்த அகதிமுகாம் அமைக்கப்பட்டிருந்தது.
கரைவாகுப்பற்று காணியில் "பொலிவேரியன் கிராமம்' என்றொரு மாதிரிக் கிராமம் உருவாக்கப்பட்டு, அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனாலும், இன்னும் சுமார் 30 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படாமல் அந்த அகதிமுகாமில் இருக்கின்றன.

தகரம், 'பிளைவூட்' பலகையினால் அந்த தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாங்கள் அங்கு விஜயம் செய்தபோது அதிகமானோரை அங்கு காணமுடியவில்லை. "இண்டைக்கு கரண்ட் போயிட்டு. இந்தக் கூடாரத்துக்குள்ள கடும் வெக்கயாக் கெடக்கு, அதான் பக்கத்துல காத்து வாங்கப் போனாம்' என்று கூறிக்கொண்டு எம்மிடம் வந்தார் அன்சார்.

அவர் மேலும் தங்களது ஆதங்கங்களை எம்மிடம் கொட்டித் தீர்த்தார். "நான் நாளாந்தம் கூலித்தொழில் செய்றன். எனக்கு 35 வயசாகுது. எங்கட குடும்பத்துல மூணு ஆம்புளயல், ரெண்டு பொம்புளயல் இரிக்@காம். எங்கள இங்க ஆறு மாசத்துக்குத்தான் இங்க இரிக்கச் சொன்னாங்க. ஆனா, இப்ப ஆறு வரிசம் முடிஞ்சி, ஏழு வருசமாக இங்கதான் இரிக்கோம். இங்க ஆத்துக்குப் பக்கத்துல இரிக்கிறதால புழு, பூச்சிகள், பாம்பு, நொளம்புக்கடிக்குள்ளதான் நாங்க வாழுறம். புள்ளயளுக்கு ஒழுங்கான பாதுகாப்பு வசதிகளும் இல்ல.

ஆறு மாத்தைக்குள்ள வீடு தாறம் எண்டு சொன்னவங்க, கிட்டத்துலதான் மீன்பிடித்துறை அமைச்சில அடிக்கல் நாட்டிட்டுப் போனாங்க, "இபார்ட்'' நிறுவனத்தால வீடு கட்டுறதாச் சொன்னாங்க. இப்ப அடிக்கல் நாட்டி ஒரு மாசமாகுது ஒண்டையும் காணல்ல' என்றார் ஏமாற்றமடைந்த தொணியில்...

தங்களுடைய கூடாரங்கள் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் இடிந்துபோய் விட்டதாகக்கூறி எம்மிடம் முறையிட்டார். அவரது தற்காலிக கூடாரத்திலுள் எம்மை அழைத்துச்சென்று காட்டினார். அங்கும் இங்குமாக பொத்தல்களுடன் கூடிய தரையும், பிய்ந்துபோன வேலிகளுக்கும் மத்தியில் இரு குழந்தைகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. பார்த்த எங்களுக்@க கண்ணீர் எட்டிப்பார்த்தது. @பாதியளவு இடவŒதி இல்லாமல் அன்சாரினுடைய மகள், வீட்டு முற்றத்தில் கல்லை அடுக்கிவைத்து அதில் சமைத்த காட்சியையும் எம் கண்கள் காணத்தவறவில்லை.

"இப்ப அடிக்கல் நாட்டின இடத்துல அவசரமா எங்களுக்கு வீட கட்டித் தந்தா நல்லம். எங்கட டீ.எஸ். சொல்லியிருக்கார், சீக்கிரமா வீடு கட்டித்தருவோம் எண்டு. நாங்க எல்லாரும் அவர்ர பேச்சத்தான் நம்பியிருக்கோம்' என்றார் அங்கு வசிக்கின்ற அப்துல் முனாபிர்.
"எனக்கு ரெண்டு பொம்ளப் புள்ளயல் இரிக்கி. அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல் போறாங்க. அவங்களுக்கு இங்க சரியான பாதுகாப்பு வசதிகள் இல்ல. இங்க இருந்து ஸ்கூல் போறது ரொம்ப கஷ்டம்' என்று முனாபிர் வேதனையுடன் தெரிவித்தார்.

தற்போது இவர்களுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நேரடியாகவே மின்சாரம் வழங்கப்படுகிறது. தகட்டுக் கூடாரத்திற்கென எந்தவிதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லை. தங்களது கூடாரத்தினை திருத்தியமைக்க தடிகள், தகரம், சீமெந்து என்பனவும் கொடுத்ததாக அங்கு வாழ்கின்ற ஒருவர் தெரிவித்தார்.
"போன வெள்ளத்தால கூடாரம் ஓட்டையும் ஒடசலுமா இரிக்கி. நாங்க அதயெல்லாம் பொத்தல்போட்டுக்கொண்டு வாழும். கறையான், கடியன், பூராண், பாம்பு, புழு,பூச்சியெல்லாம் இங்க வருது. அத எங்களால கட்டுப்படுத்த ஏலாது' என்று முனாபிர் சொல்லும்போது அவரது முகத்தில் சோகம் தழும்பியது.

அகதிமுகாமில் வாழும் இவர்கள் கடந்த வெள்ளத்தின்போது இரண்டாவது தடவையாக மீண்டும் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த கதையைக் கேட்டபோது அவர்களது சோகத்தை எம்மால் ஜீரணிக்கமுடியாமல் @பானது.
"சுனாமி அடிச்சி 7 வரிசமாச்சி. ஆனா, எங்கள பகடக் காயாகக் காட்டி இங்க உள்ள அரசாங்கமும் உத்தியோகத்திர்களும் எமாத்துறாங்க. எலக்ஸன் வந்தா நாங்க சிறுநீர் கழிக்கிற இடத்தில வந்து, காக்கா... மச்சான்... நாங்க எம்.பி.யாகனும். நம்மட பிரச்சினய நாமதான் தீர்க்கணும் எண்டு வோட்டுக் கேட்டுப்போன எந்த எம்.பி.யும், மினிஸ்ட்டரும், வெண்டதுக்குபொறகு இந்தப்பக்கம் வந்து எட்டிப் பாக்குற@த இல்ல' என்று தனது மனக்குமுறலை எம்மிடம் கொட்டித்தீர்த்தார் அங்கு வசிக்கின்ற கூலித்தொழில் செய்யும் மன்சூர்.

"இங்கு வந்து அவர்களால் ஒரு நாளைக்காவது இருக்க முடியுமா' என்று தனது தனிப்பட்ட கருத்தை அரசியல்வாதிகளிடம் முன்வைத்தார் அவர்.

"இங்க இண்டைக்கு இரவைக்கு எண்டாலும் வாழக்கூடிய கொமருகள் இருக்குது. ஆனா, கலியாணம் முடிக்க வீடு இல்ல. வீடு இல்லாம எங்க குடும்பம் நடத்துற...? நாங்க மக்கள்ர பிரச்சினய தீர்ப்பாங்க எண்டு வோட்டுப் போட்டா, அவங்க அங்க பலாக்கன்று நாட்டுறாங்க, இங்க மாங்கன்று நாட்டுறாங்க. லிபியாவுக்கு, ஜப்பானுக்கு, கனடாவுக்கு போறாங்க. நாங்க இவங்களுக்கு இதுக்கு வோட்டுப் போடல்ல. ஒரு வோட்டுட பெறுமதி எங்களுக்குத்தான் தெரியும்' என்றபோது அவரது கண்கள் கலங்கின.

"இங்குள்ள எந்த அரசியல்வாதியும் மக்களை நேரடியாகப் பார்த்து இவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க முன்வருகிறார்கள் இல்லை' என்ப@த அங்குள்ள மக்களின் ஆதங்கமாக இருந்தது. தாங்கள் இருக்கின்ற ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம்கூட இவர்கள்மீது அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அங்கு விஜயம்செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் "நீங்கள் சுனாமி அடித்து இப்போதும் அகதிமுகாமில் இருக்கிறீர்கள் என்பதைக் கேட்கும்போதே எனக்கு வெட்கமாக இருக்கின்றது. இங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்' என்று கேட்டதாகவும் மேலும் தெரிவித்தார்கள்.

இவர்கள் தங்களது நிரந்தர வீட்டுக் கோரிக்கைகளை முன்வைக்க கால்நடையாக ஜனாதியிடம் செல்ல முயற்சித்தபோது, "உங்களுக்கு வீடுகள் விரைவில் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்ற சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் வேண்டுகோளை ஏற்று அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸை தொடர்புகொண்டு கேட்டபோது; "ஆரம்பத்தில் வெனிசூலா நாட்டினால் எ+3 தொடர்மாடி வீடுகளை அமைக்க 400 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தனித்தனி வீடுகள் அமைக்க அதிகளவான காணிகள் தேவைப்பட்டதால், கரைவாகுப்பற்று வயல் காணியை நிரப்ப எதிர்பார்த்ததைவிட அதிகளவான நிதி செலவாகியது. இதனால், 200 அளவிலான வீடுகளையே கட்ட முடிந்தது. அதன்பின்னர் மீன்பிடித்துறை அமைச்சுன் இபார்ட் நிறுவனம் இணைந்து 90 வீடுகளைக் கட்டிக்கொடுத்தது.

இன்னும் 300 வீடுகள் அளவில் கட்ட வேண்டியிருக்கின்றது. மீண்டும் "இபார்ட்'' நிறுவனத்தால் 120 வீடுகளுக்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பது அல்லது அவர்களது இடங்களிலேயே வீடுகளைக் கட்டுவற்கான நிதியைக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது' என்று தெரிவித்தார்.

ஏழு வருடங்களாக "அகதிகள்' என முத்திரை குத்தப்பட்ட இவர்களது இன்னல் வாழ்க்கை இன்னமும் தற்காலிக கூடாரங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. அடிக்கல் நாட்டுவதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும் சம்பந்தப்பட்டவர்கள் குறியாக இருக்காமல் இம்மக்களது பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும். வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிய நிலையில் அங்குள்ள மக்கள் இன்று கட்டித்தருவார்கள், நாளை கட்டித்தருவார்கள் என காத்திருந்து காத்திருந்து ஏமாற்றத்தை@ய சந்தித்துள்ளனர். எனவே, அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளை உடனை கட்டிக்கொடுக்க உரியவர்கள் முன்வரவேண்டும்.

Tuesday, June 7, 2011

''முகப்புத்தகம்'' - பேஸ்புக்கில் காதல்


- முஹம்மட் பிறவ்ஸ் -

தியேட்டருக்குப்போய் படம்பார்த்த காலம்போய் இப்பொழுது முழுக்கமுழுக்க யூடியூப்பயே நம்பி எடுக்கப்பட்ட குறும்படம்தான் "முகப்புத்தகம்'. அட்லியின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்து தற்போதுது யூடியூப்பில் சக்கை போடுகிறது இந்த 20 நிமிடக் குறும்படம்.
விஜய் ரீ.வி.யின் `கலக்கப்போவது யாரு` நிகழ்ச்சியின் வெற்றி நாயகன் சிவகார்த்திகேயன், எம்.சதீஸ், சூர்யா பாலகுமாரன் மற்றும் இவர்களுடன் நான் கடவுள், உத்தம புத்திரன் ஆகிய திரைப்படங்களில் நடித்த ராஜேந்திரனும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். கதை, வசனம்-சூர்யா பாலகுமாரன், பிரியா மதன், இசை-நந்தா, பாடல்-நவீன், கமெரா-ஜோர்ர்ஜ் சி.வில்லியம்ஸ்.

இக்காலத்தில் இளைஞர், யுவதிகள் சதா எந்நேரமும் அரட்டையடித்துக்கொண்டிருக்கும் பேஸ்புக்கின் மறுமுகத்தை புடம்போட்டுக் காட்டுவதே இக்குறும்படம். போலியான பெண்களின் பேஸ்புக் கணக்கினால் ஏமாற்றப்படும் ஆண்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்று பலகோணங்களில் சொல்லியிருக்கிறார் அட்லி இந்த முகப்புத்தகத்தினூடாக.

பேஸ்புக்கில் முகம்தெரியாமல் பழகிய தனது காதலியான புஜ்ஜுவை சந்திக்க தனியாகவரும் முரளிக்கு அவளை(ன)க் கண்டதும் பேரிடி விழுகிறது. கொரியா நாட்டு செல்போனில் பெண் குரலில் பேசி, அவனை ஏமாற்றி அடித்துக் கொன்றுவிட்டு முரளியின் உடமைகளை கொள்ளையடித்துச் செல்கிறான் சதீஸ் எனும் ஏமாற்றுப் பேர்வழி.

"டீக்கடைப் பருவம்... நுனி மீசை உருவம்...' பாடல் சினிமாப் பாடல்போல் ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. நந்தாவின் பின்னணி இசை பாடலில் மட்டுமல்லாது பட இடங்களிலும் பேசியிருக்கிறது. ஜோர்ஜ் சி.வில்லியம்ஸின் கமெரா பல கோணங்களில் மௌன வார்த்தைகளால் பேசியிருக்கின்றது. கூடைப்பந்து விளையாடும்@பாது "இது புது வோல், கீழே விழுந்தால் மண் ஒட்டிவிடும், அப்பா திட்டுவார்' என்பதெல்லாம் ரொம்ப சின்னப் பிள்ளைத்தனமான ஜோக். மொட்டை மாடியில் வீட்டுக்கார அம்மாவுடன் கடலைபோட்டுக்கொண்டு பாட்டுக்கு "சிக்னல்' கொடுப்பது தேவையே இல்லாத காட்சி. அந்த இடத்தில் காரணமில்லாமல் குட்டையைக் குழப்பியிருக்கிறார் கதாசிரியர்.

ஜீவாவுக்கு (கார்த்திகேயனுக்கு) பேஸ்புக் மூலம் அறிமுகமான ஆர்த்தியுடனான காதல் செல்போன்வரை செல்கின்றது. ஆர்த்தி மின்னஞ்சலில் அனுப்பிய அவளது படத்தைப் பார்க்கவரும் நண்பர்களின் ஆர்வம் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவள் அனுப்பியது ஹொலிவூட் நடிகை "அஞ்சலீனா ஜோலி'யின் புகைப்படம் என்பது தெரிந்ததும் ஜீவாவின் முகத்தில் ஈயாடுவதையும் நண்பர்கள் கிண்டலடிப்பதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளலாம். ஜீவா தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
அதற்காக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு மதுவருந்தி மாறிமாறி தங்களுக்கள் கிண்டலடிப்பது பார்வையாளர்களைக் கடுப்பேற்றுகிறது. இக்காட்சி ரொம்ப ஓவரான அலட்டல்.

அந்நேரத்தில் ஆர்த்தி ஜீவாவை நேரடியா சந்திக்கவரும்படி அழைக்கிறாள். 'ஆண்டவன்' எனும் ராஜேந்திரன் தனது அடியாட்களுடன் ஜீவானின் பாதுகாப்புக்காக அவ்விடத்தில் பதுங்கியிருக்கின்றனர். கண்தெரியாத ஆர்த்தியின் அறிமுகத்தில் நிலைதடுமாறிப் போகிறான் ஜீவா. அந்நேரத்தில் ஆர்த்தி "பேஸ்புக்கில்' தனது காதலை வெளிப்படுத்தியதாகச் சொல்லும்போது, ராஜேந்திரன் பேஸ்புக்கை, பிஸிக்ஸ் புக் என்று நினைத்து அந்தப் பொண்ணுக்கிட்ட வாங்கின "பிஸிக்ஸ் புக்கை' திருப்பிக் கொடுக்கச் சொல்லும்போது, விழுந்து விழுந்துதான் சிரிக்கவேண்டும்.

கண்தெரியாமல் எப்படி 'பேஸ்புக்' பயன்படுத்த முடியும் என்ற எமது கேள்வி ஜீவாவின் கேள்வியாக ஆர்த்தியின் காதில் ஒலிக்க, அடுத்த நிமிடமே ஆர்த்தியிடமிருந்து பதில் வருகிறது. "JAWS" எனும் மென்பொருள் மூலமாக பயன்படுத்துவதென்றும் இதுவரை பேஸ்புக்கில் 834 பார்வையற்ற பயனர்கள் இருக்கிறார்கள்' என்றும் நமக்கு தெரியாத ஒரு பொது விடயத்தை கதைக்குள் புகுத்தியிருக்கும் கதாசிரியரைப் பாராட்டலாம்.

ஜீவா ஆர்த்தியுடன் சேர்ந்தாரா? இல்லையா என்பதே மீதிக்கதை. நண்பர்களுடன் சேர்ந்து முடிவெடுக்கும்@பாது, ஒருவர் 'கோழிக்கும் கண் தெரியணும்; குழம்பும் ருசியா இருக்கணும்' எனும் வசனம் எல்லோரையும் கவருகின்றது. நண்பர்களின் பேச்சைக்கேட்டு முடிவெடுக்கும் ஜீவா, மாற்றமாக ஆர்த்தியுடன் கைகோர்ப்பதில் தனது காதலின் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முரளி, ஜீவா மற்றும் கடைசியில்வரும் ஒருவரும் பேஸ்புக்கில் அறிமுகமான தனது காதலிக்கு செல்போனில் அழைப்பை மேற்கொள்ளும்போது எல்லோருக்கும் "முன்பே வா... அன்பே வா...' எனும் ரிங்கிங் டோன் கேட்கும்போது, ஒரே ஆள்தான் பல ஆண்களை ஏமாற்றிப் பிழைக்கிறார் என்பதைச் சொல்லி முடித்திருக்கிறார் அட்லி.

ஆண்டவனாக வரும் ராஜேந்திரன் 'அந்த ஆண்டவன் உங்களை கைவிட்டாலும் இந்த ஆண்டவன் கைவிடமாட்டான்' எனும் வசனம் எல்லோரும் ரசிக்கும் வண்ணமுள்ளது. இலாபத்தை எதிர்பார்க்கமால் பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களை மக்களுக்குச் சொல்லியிருக்கிறது "முகப்புத்தகம்'' எனும் இக்குறும்படம். பேஸ்புக்கில் அவர்கள் அறிமுகமாகும் காட்சியையும் காட்டியிருந்தால் இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும். ராஜேந்திரன் வில்லனா? காமெடியனா என யோசிக்கத் தூண்டுகிறது. சிவகார்த்திகேயன் இன்னும் முயற்சித்தால் சினிமாவுக்குள் நுழையலாம். இது அதற்கான ஒரு அத்திவாரமாகக்கூட இருக்கலாம். இவ்வாறான சமூக விழிப்புணர்வுக் குறும்படங்களை நாம் இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றோம்.

இப்போது இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் அலுவலகம் தொட்டு பேஸ்புக்கிலேயே தொங்கிக்கொண்டு தங்களது நேரத்தைப் போக்குகின்றனர். அதில் தங்களது சுயவிபரங்களைப் பகிர்வதும் தொலைபேசி மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதும் எவ்வளவு பாரதூரமானது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. அத்துடன் பெண்களின் பெயர்களில் போலியான கணக்குகள் பேஸ்புக்கில் இருப்தையும் "முகப்புத்தகம்'' சுட்டிக்காட்டத்தவறவில்லை.

எது எப்படியிருப்பினும் நம்மைநாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியாதவர்களிடம் சுயவிபரங்களைப் பகிர்ந்துகொள்வதில் எச்சரிக்கையாக இருப்பது வருமுன் காக்க உதவும்.
முகப்புத்தகம்-பேஸ்புக்கில் புரட்டப்படாத காதல் பக்கங்கள்.

நன்றி: இருக்கிறம் (30.05.2011)


Monday, May 30, 2011

ஒரு படைப்பாளனாக நான் படைத்த பல்வேறு ஓவியங்கள் என் ஆத்ம வேதனைகளை அதிகமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.




ஓவியக் கலைஞரும் ஆசிரியருமான முஸ்தபா அரபாத்

நேர்காணல்: முஹம்மட் பிறவ்ஸ்


உணர்ச்சிகளை அழகிய தன்மையோடு உருவாக்கி வெளிப்படுத்தும் காட்சி மொழி தான் ஓவியம். இந்த ஆற்றல் எல்லோருக்கும் அமைவதில்லை. அது இறைவன் ஒரு சிலருக்கு வழங்கியுள்ள அரும் கொடை. எந்தவொரு படைப்பையும் ஓவியமாக காட்டும்போது அதன் தாக்கமும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அவ்வளவு ஏன்? நம்நாட்டில் நடைபெற்ற யுத்தம் அதனால் ஏற்பட்ட தாக்கங்களை நீங்கள் பத்திரிகைகளில் வாசிக்கும்போது ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கும். அதையே நீங்கள் ஓவியங்கள் மூலம் காணும்போது சற்று அதிகமாக எதையோ ஒன்றை உணர்ந்திருப்பீர்கள். அதுதான் ஓவியங்களின் வலிமை. எந்தவொரு கலையும் பிறக்கும் போது வருவதில்லை. எந்த மனிதனும் பிறவியிலே கலைஞனாப் பிறப்பதில்லை. அவனது ஆர்வமும் இடையறாப் பயிற்சியுமே அவனை கலைஞனாக மாற்றுகிறது. நவீன ஓவியர்களுள் ஓவியக் கலையை முறையாகப் பயின்று ஓவியம் தீட்டுபவர்களும் உள்ளனர்;. தாமே கற்று ஓவியம் வரைபவர்களும் உள்ளனர். மேலும் மரபு சார்ந்த ஓவியர்களும் மரபு சாரா ஓவியர்களும் உள்ளனர். அவற்றுள், தானே ஓவியம் வரைந்து கற்றுக்கொண்ட ஒரு ஓவியர்தான்; சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் முஸ்தபா அரபாத். கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியை கற்ற இவர் அட்டாளைச் சேனை ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஓவியத்துறையில் விசேட பயிற்சியை முடித்துள்ளார்.

சிறுவயதுக் காலங்களில் தான் பார்த்தவற்றையும் பத்திரிகைகளில் வரும் படங்களையும் பார்த்து வரைந்து பழகியவர் இன்று சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில ஓவியக் கலை ஆசிரியராக பணியாற்றுகிறார். பல்வேறு ஓவியக் கண்காட்சிகளை நடத்திய இவரது பல சித்திரங்கள் ஜனனி மித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இருக்கிறமுக்காக இவரை அண்மையில் சந்தித்தபோது இவர் ஆசிரியரா மாணவரா என்று சற்று தடுமாறித்தான் போனேன். வயதுக்கு மீறிய அவரது படைப்புக்களைப் பார்த்து என்னால் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. ஓவியம் வரைவதற்கான ஆர்வம் ஏற்பட்டது பற்றிக் கேட்டேன்.

'சின்ன வயசில இருந்தே கலைகளில் ஆர்வம். ஓய்வு நேரங்கங்கல்ல எதையாவது வரைஞ்சுக்கிட்டு இருப்பன். எனக்கு பொழுது போக்கே எதையாவது வரைந்து கொண்டு இருக்கிறதுதான். வாப்பா இல்லாத டைமிலதான் அதிகமா வரையிறது. ஏனெண்டால் நான் படிக்கணும் எண்டு சொல்லி வரைய விடுறதில்ல. அவர் வீட்ல இல்லாத டைம்ல நான் வரையிற. பாடசாலைக்குப் போறத்துக்கு முன்ன இருந்தே வரைய தொடங்கிட்டன். நான் வரையிறதுக்கு என்னோட நண்பர்கள் தான் உறுதுணையா இருந்தாங்க. சிறுவயதில காட்டூன் வரையிறதில ஆர்வம் இருந்தது. கல்லூரி காலங்கள்ல சிரேஸ்ட மாணவர்களை காட்டூனா வரைந்து அடிவாங்கியிருக்கன்..' என்றவர் தான் வரைந்த ஓவியம் முதன் முதலாக 'அகரம்;' என்ற சஞ்சிகையில் வெளிவந்ததாக கூறி மகிழ்ந்தார்.

'சித்திரத்தில வந்து பொதுவா நாலு வகை இருக்கு. 'சத்தியம்' எண்டு சொல்றது இயற்கையானதில வரையிறது. அடுத்தது வைணிகம். அது இசைப் பண்பு நிறைந்தது. அடுத்தது நாகரம். நாகரம் எண்டு சொல்றது நாகரிகத்தை உடையதாக இருக்கும். நான்காவது நிக்கிரம். இது கலப்புடையது. தொன்மைக் காலத்தில விஷ்ணு தர்மோத்திரம் என்கிற தொன்மையான ஓவிய நூலில் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே வகைகள்தான் இப்பவும் இருக்குது' என்றார்.

உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களையும் இயற்கையைப் பிரதிபலிக்கின்ற ஓவியங்களையும்தான் இவர் விரும்பி வரைவாராம். தான் வரைந்த ஓவியங்களில் மனித மரங்கள் என்ற ஒரு சித்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார். அதிகமாக நாட்டிலும் வீட்டிலும் நடக்கும் பிரச்சினைகளை தத்ரூபமாக தன் கைவண்ணத்தில் ஓவியமாக தீட்டியிருந்த அவரது சில ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே ஓவியம் வரைவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கின்றதா என்று கேட்டேன்.
'நான் கல்விக் கல்லூரிக்கு சென்ற போது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் வரைவாங்க. அவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காணும் சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சது. சிலவங்க புள்ளிகளைப் பயன்படுத்தி வரைவாங்க. சிலர் வர்ணங்களை மிகவும் அடர்த்தியா பயன்படுத்துவாங்க. மற்றது வர்ணங்கள்ல நீர்த்தன்மையானத பயன்படுத்துவாங்க. சிலர் கோடுகளைப் பயன்படுத்தி வரைவாங்க. இப்படி எல்லாத்தையும் ஒரே இடத்தில கற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சது' என்றார் பெருமையோடு...

தனக்கு ஓவியத்தில் புதுப்புது முறைகளைப் பயிற்றுவித்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த விரிவுரையாளரும் சிற்பியுமான அல்லிராஜாவை இந்த இடத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இஸ்லாமிய மார்க்கத்தில் உயிருள்ள பொருட்களை வரைவது தடைசெய்யப்பட்டதாக இருக்கும்போது நீங்கள் எவ்வாறு இவற்றை வரைகின்றீர்கள்....
'உண்மைதான். ஓவியம் வரைவதற்கு இஸ்லாத்தில் தடையில்லை. நான் ஒரு ஆசிரியராக இருப்பதால் என் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க நான் எல்லாம் வரைய தெரிந்திருக்கத்தானே வேண்டும்.. அவ்வாறான ஓவியங்களை வரைந்து வீடுகளில் தொங்கப்போடுவதற்கு தடை உண்டுதான். அதனால் நான் அவற்றை வரைந்து எங்காவது மூடி வைத்துவிடுவேன்' என்றார் சிறிய வருத்தத்துடன்.

நம் நாட்டைப் பொறுத்தளவில் ஓவியம் வரைந்து காலத்தை ஓட்டலாமா?
'மேலை நாட்டைப் பொறுத்தவரையில் சித்திரத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கு. ஆனால் அந்தளவிற்கு நம்மட நாட்டில இல்லை. ஒவ்வொரு கலைஞரும் தான் வரைந்த ஓவியங்களை விற்பதற்கு சுதந்திரமுண்டு. கலைஞர்கள் என்றாலே வறுமைப்பட்டவர்களாத்தான் இருப்பாங்க. அது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவங்க வாழ்வின் பெரும்பாலான பகுதிகள வந்து ஓவியம் வரையிடுறதிலையே செலவிடுறதால அவங்கட குடும்ப நிலமையும் கஸ்டத்தில் இருக்கும். ஆனால் அத்தகை ஓவியங்களை வாங்குவது மிகவும் குறைவே...' என்றார்.
ஒரு கருத்துள்ள ஓவியத்தை ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்குரிய விதத்தில்புரிந்து கொள்வர். ஒரு சிலருக்கு கோடுகளாகவும் சில வண்ணச் சிதறல்களாகவும் தெரியும் அதே சித்திரம் பிறிதொருவருக்கு ஆயிரம் அர்த்தங்களைக் கொடுக்கலாம். இதுதான் சித்திரக்கலையின் சிறப்பு. இது ஒவ்வொருவின் மனநிலைக்கும் ஏற்ப மாறுபடும்.
நீங்கள் ஒரு ஓவிய ஆசிரியர் என்றவகையில் மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஆர்வம் செலுத்துகின்றனர? அதில் பெற்றோர்களின் பங்களிப்பு என்ன?
எந்தவொரு துறைய எடுத்துக்கொண்டாலும் அதில ஆர்வமும் அதை மதிக்கிற தன்மையும் இருக்க வேண்டும். ஆர்வமிருந்தால் செய்ய முடியாதது உலகத்தில எதுவும் இல்ல. சில பெற்றோர் என்னிடம் சித்திரம் கீறித் தருமாற வருவாங்க. நானும் கீறிக் கொடுப்பன். மறுநாள் வகுப்பில் வந்து பார்த்தால் நான் கீறின சித்திரத்தையே என்கிட்ட மாணவர்கள் தாங்கள் வரைந்ததாக காட்டுவாங்க. அதுக்கு பிறகு கீறிக் கொடுக்கிறத விட்டுட்டன். ஒவ்வொரு ஆசிரியரும் பிள்ளைகள்தாள் கீறுகிறார்கள் எண்டு நினைப்பாங்க. ஆனால் பெற்றோர்கள் மற்றாக்கள்ட கொடுத்து கீறி கொடுக்கிறதுலா எந்தப் பயனும் இல்ல. அவர்ள் கீறிப் பழக பழகத்தானே ஒரு பயிற்சியாக அமையும்?' என்றவர் சுனாமி அனர்த்தத்தின் போது தான் வரைந்த நிறைய ஓவியங்கள் அழிந்துவிட்டதாக கூறி வருந்தினார்.

யாருடைய ஓவியம் உங்களுக்குப் பிடிக்கும்?
நான் வந்து அதிகமாக வின்ஸன்ட் வான்கோ வின் ஓவியங்களைத்தான் அதிகமா விரும்புவது. இவருடைய ஓவியங்கள் மற்றவர்களுடைய ஓவியத்தை விட வித்தியாசமாக இருக்கும். உள்ளத்து உணர்வுகளை அப்படியே வெளிக்காட்டும் இந்த ஓவியங்கள் பல்வேறுபட்ட மக்களுடைய வாழ்வியல் அம்சங்களைச் சித்தரிக்கிறன.

இன்ற நம்நாட்டில் ஒவியக்கலை குறிப்பிட்ட சொல்லக்கூடிய அளவில் வளர்ச்சியடையவில்லை. இதனை ஊக்குவிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்று கேட்டபோது....
'இலங்கையில சித்திரக்கலை பயில்வதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. சித்திரத்திற்குரிய மூலாதாரங்கள் இல்லை. இப்ப எல்லாமே செலவு அதிகரித்து போகுது. பாடசாலையில கூட வந்து எல்லாப் பிள்ளைகளாலையும் சித்திரம் கீறுவதற்கு தேவையானத பெற்றுக்கொள்வது கஸ்டமாகத் தான் இருக்குது. சித்திரத்துக்குரிய வரலாறுகூட தமிழில் வருவது குறைவு. சிங்களத்தில்தான் வந்திருக்கு. இந்தியா போன்ற நாடுகளில் அதுக்குரிய வரவேற்புகள் கூடுதலாக இருக்கு. எங்களுக்கு தேவையான பத்தகங்களைக்கூட இந்தியாவில்தான் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கு. ஆகவே நம்ம நாட்டிலயும் அதற்கான வழிவகைகளை செய்துகொடுக்க வேண்டும். அத்தோடு இப்போதைய பிள்ளைகளை சித்திரம் கீறுவதில் ஆர்வம் காட்டி தங்கள் கீறும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது நம்நாட்டிலும் வருங்காலத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம். எங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு ஏதாவது சாதிக்க முயலவேண்டும். எம்மிடம் எத்தனை கலைகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்துவதற்குரிய அங்கீகாத்தைப் பெற்றுக்கொள்ளுவதுதான் மிக அவசியம். நான் முன்பு வரைந்த ஓவியங்களுக்கு இப்ப நானொரு ஓவிய ஆசிரியரான பிறகுதான மதிப்பே கிடைச்சிருக்கு. நம்மட சமூகத்தில ஒரு பிரபல்யமான அங்கீகாரம் பெற்ற ஒருவர் ஏதாவது செய்யும் போதுதான் அதுக்கு மதிப்பு தாறாங்க. ஆகவே இன்று கலைஞனுக்கு ஒரு அங்கீகாரமும் தேவையாக இருக்கிறது' என்றார்.

உங்கள் ஓவியங்கள் எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
'பொதுவாக நான் ஓவியம் வரைவதே என் மனதை ஏதாவது அதிகமாக தாக்கும் சந்தர்ப்பங்களில்தான். அந்த நேரத்தில் ஏற்படுகின்ற உணர்வுகளை ஓவியமா வரைவதால் மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். அது என் ஒவியத்தைப் பார்க்கும் மக்களுக்கும் ஏற்படவேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. பல்வேறு பிரச்சினைகளைக் குறித்த எனது படைப்புகள் மொழி, இனம், நிறம் கடந்து பல்வேறு தரப்பையும் சிந்திக்க வைத்துள்ளன. ஒரு படைப்பாளனாக நான் படைத்த பல்வேறு ஓவியங்கள் என் ஆத்ம வேதனைகளை அதிகமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. இன்று நமக்குள் நாமே அழுதுகொண்டு அதற்கு மருந்தையும் நாமே போட்டுக்கொள்கின்றோம். தொடரும் இந்த வலி மிகுந்த வேதனைகளை என் ஓவியங்களில் காட்டியுள்ளேன். இன்றைக்கு கையறு நிலையில் இருக்கும் தமிழினத்தின் அவலத்தை இவ்வாறான ஓவியங்கள் மூலம் உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறலாம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது' என்றார் வயதுக்கே உரிய துடிப்புடன்.

போராட்டம் பற்றிய புரிதலை உலக அளவில் கொண்டு சேர்க்கவேண்டிய விடயத்தில் தமிழர்களும் தவறு செய்திருக்கின்றார்கள் என்றுதான் கூறவேண்டும். தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான முழு வலிமையும் ஓவியத்துக்கு இருக்கின்றது என்பதை மறந்துவிட்டார்கள். பொதுவாக எமது மக்கள் ஓவியங்கள் எனும் போது அது அழகாக இருக்கவேண்டுமென்றே நினைக்கின்றார்கள். அதற்குள் புதைந்துள்ள உணர்வுகளை அந்தக் கண்னோட்டத்தில் பார்க்கும்போதுதான் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இத்தகைய வலிமைமிகு ஓவியத்தை அழகாக எமது வாழ்வியலோடு மக்கள் பிரச்சினைகளோடு தொடர்புபடுத்தி வரையும்போது நிச்சயம் அதன் பலனை அனுபவிக்கலாம். ஆகவே அதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமன்றி அதற்குத் தேவையான வளங்களையும் எமது நாட்டிலேயே ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

இருக்கிறம்: 23.05.2011

'வசூல்' வேட்டையில் இணையத்தள வானொலிகள்


'நீங்களும் அறிவிப்பாளராகலாம்', நேரடியாக எமது கலையகத்தில் பணியாற்றலாம்', 'பிரபல ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு| இப்படிப் பலவாறான விளம்பரங்களை அன்றாடம் பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். சிலர் வரிந்து கட்டிக்கொண்டு விண்ணப்பங்களை நிரப்பிப் போட்டுமிருப்பீர்கள். சிலர் அதற்கும் ஒரு படி மேலே போய் கையில் இருப்பதை விற்றுப் பணமாக்கி அவர்கள் கேட்கும் தொகையை அனுப்பிவிட்டு ஏமாந்த சோனகிரிகளாக இருப்பீர்கள்.

அவ்வாறு ஓடி ஏமாற்றமடைந்தவர்கள் பட்டியலில் என்னையும் இணைத்துக்கொள்ளலாம். நானும் இவ்வாறு பத்திரிகை விளம்பரமொன்றைப் பார்த்துவிட்டு ஒரு இணைய வானொலிக்கு நேர்முகத் தேர்விற்குச் சென்றேன். குரலைப் பரீட்சித்துவிட்டு ஷநீங்கள் இந்த வானொலியில் பணியாற்றலாம். ஆனால், இதற்கான பயிற்சிநெறிக்காக நீங்கள் 10 ஆயிரம் ரூபா கட்ட வேண்டும்| என்று கேட்டனர். ஆர்வக்கோளாறு காரணமாக நானும் கட்டணத்தை செலுத்தி இணைந்துகொண்டேன். விடுமுறை நாட்களில் வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களால் ஊடகவியல் தொடர்பான சில வகுப்புகள் நடத்தப்பட்டன.

அறிவிப்பாளராக பணிபுரியலாம் என்று அறிவித்து விட்டு இப்படி பயிற்சி நெறியை மட்டும் நடத்துகிறீர்களே என்று நான் கேட்டபோது பயிற்சிநெறியை நடத்தியவர் கூறினார் 'தம்பி பயிற்சிநெறி முடிவடைந்ததும் திறமையானவர்களை (ரொம்பவும் ஆர்வக் கோளாறு உள்ளவர்களை) நாங்கள் அறிவிப்பாளர்களாக இணைத்துக்கொள்வோம்' என்று. நான் அப்படிக் கேட்டதாலோ என்னவோ ஒருவாறு அறிவிப்பாளராக மூன்று மாதங்கள் இரவு, பகல் பாராது ஐந்து சதம்கூட சம்பளம் இல்லாமல் வேலை செய்தேன். அந்த வானொலியில் பிரதான முகாமையாளராம் அவர். அறையை விட்டு வெளியே வரமாட்டார். அவரிடம் போய் கேட்டபோது ஷஇப்போது சம்பளம் இல்லாமல் வேலைசெய்ய யூனிவர்சிற்றில, மற்றும் ஊடகத்தில் ஆர்வமுள்ளவர்கள் பலர் முன்வருகின்றனர். அப்போ, நாங்கள் சம்பளம் கொடுத்து அறிவிப்பாளர்களை வைக்கவேண்டிய தேவையில்லையே| என்றாரே பாருங்கள். 10,000 காசை என்னிடமிருந்து கைநீட்டி வாங்கும் போது அத்தனைப் பற்களையும் காட்டி இளித்தவர் அன்று என்னிடம் கடுகடுத்தார். என்னசெய்ய அவர்களிடம் வாதாடி நடக்கப்போவது ஒன்றுமில்லை என்று அறிந்துகொண்ட நான் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

அறிவிப்பாளர் ஆகவேண்டுமாயின் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம் என்ற நம் ஆர்வக்கோளாரை நன்கு அறிந்துகொண்ட இவ்வாறான நிறுவனங்கள் அதைப் பயன்படுத்தி நன்றாகவே பணம் உழைக்க ஆரம்பித்துவிட்டனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இவ்வாறான விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். அங்குள்ள என் நண்பர் ஷஅவங்க வேலைக்கு எண்டு பேப்பர்ல கோல் பண்ணிட்டு, இன்டர்வியூவுக்குப் போனதும் கோர்ஸ் எண்டு சொல்றாங்க. கோர்ஸ் எண்டா ஆரும் அப்ளை பண்ண மாட்டாங்க. நானும் போயிருக்கவே மாட்டன். பொறகு 10 ஆயிரத்த வாங்கிட்டு ஒழுங்கா கிளாஸும் வெக்கிறதில்லை. சும்மா ஆசை காட்டி இப்படி எமாத்துறாங்க. பொறகு நாங்க உங்களுக்கு அந்த றேடியோவுக்கு, இந்த றேடியோவுக்கு வேலை எடுத்து தருவம் எண்டு பொய்யச் சொல்லி ஏமாத்திட்டாங்க. இதை உங்க பேப்பர்ல போட்டா புண்ணியமா போவும். எத்தனையோ பேர் இப்படி ஏமாறுறாங்க' என்றார் அழாக்குறையோடு...

இருந்தும் பல இளவட்டங்கள் அறிவிப்பாளராகும் எண்ணத்தில் அவ்வாறான நிறுவனங்களில் நாளுக்கு நாள் படித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். பிரபல ஊடகங்களில் பணியாற்றுபவர்களை சுட்டிக்காட்டி அவர்களுக்கு தாங்கள்தான் வேலை எடுத்துக்கொடுத்தோம் என்று பீற்றிக்கொள்கின்றார்கள். ஆனால் தேடிப் பார்க்கையில் அங்கே அப்படி ஒரு மண்ணும் இல்லை என்று என் ஒலிபரப்புத்துறை நண்பர் ஒருவர் கூறக் கேட்டேன். 'எங்கட முயற்சியாலதான் நாங்க வேலக்கி வந்தம். அவங்கட ரெகமண்ட் எல்லாம் இங்க எடுபடாது. ஒரு சேர்ட்;டிபிக்கேட்ட கையில் குடுத்து கைகழுவிட்டாங்க. இப்ப எங்களக் காட்டி பொழப்பு நடத்துறாங்க| என்று ஆதங்கப்பட்டார்.

சுற்றிச் சுற்றிப் பார்க்கும்போது நிறைய பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனது நண்பி ஒருவரும் இவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கின்றார். 'சூப்பர் ஸ்டார்| இன் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்ட ஒருவர் தனக்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 12 ஆயிரத்துக்கு ஷஆட்டையைப்| போட்டதாகத் தெரிவித்தார். அந்த மோசடிப் பேர்வழி வீட்டுக்கே வந்து நண்பியின் பெற்றொரின் முன்னிலையில் பணத்தை பவ்வியமாக பெற்று அதுக்கு ஒரு ரசீதும் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். பிறகு அவரை தொடர்புகொள்ளமுடியாமலேயே போய்விட்டதாம். கொடுத்த பற்றுச்சீடடை வைத்து குறிப்பிட்ட இடத்துக்கு போய் பார்க்க அந்த இடமும் காலிசெய்யப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஒரு இணையத்தள வானொலியொன்று தனது கிளையை நிறுவி, ஒரு பண்டிகை தினத்தன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 96.1 (நடமாடும்) அலைவரிசையை எடுத்து இரு தினங்களுக்கு நிகழ்ச்சிகளை நடாத்தி கொள்ளை இலாபம் சம்பாதித்திருக்கின்றது. அந்த இணையத்தள வானொலியில் பயிற்சிக்காக வந்தவர்களிடம் விளம்பரங்களை சேகரித்துவருமாறு பணித்தனர். அதில் ஒரு சில யுவதிகள் தங்களால் விளம்பரம் எடுக்க முடியாமல் தங்களது சொந்தப் பணத்தைக் கொடுத்ததாகவும் அங்கு பயிற்சிபெற்ற பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நபர் தெரிவித்தார்.

இணையத்தள வானொலிகள் சில ஷவேலை தருகிறோம்| என்று விளம்பரம் செய்துவிட்டு ஷகோர்ஸ்| என்று அடிப்படையில் இளைஞர்களின் எதிர்காலத்தையும் பணத்தையும் வீணடித்து வருகின்றன. இது தொடர்பாக ஷவாரணம் எப்.எம். முகாமைத்துவப் பணிப்பாளர் குணசீலனுடன் நான் தொடர்புகொண்டு கேட்டபோதுளூ ஷநாங்க அப்படியெல்லாம் பேப்பர்ல விளம்பரம் போடுறதுல்ல. ஆனா, நெறயப் பேருக்கு வேல எடுத்துக் குடுத்திருக்கம். திறைமயானவங்க எங்களிட்ட இருந்தா நாங்க கட்டாயம் அடையாளப்படுத்துவோம்| அப்படி எங்களது முயற்சியால் சிலருக்கு பிரபல ஊடக நிறுனவங்களில் வேலை எடுத்துக் கொடுத்திருக்கிறம்' என்று பட்டியலிட்டுக் காட்டினார். இன்று எல்லா வானொலிகளுமே வர்த்தக நோக்கத்தை மையமாக வைத்தே இயங்குகின்றன. அதற்குள் நடக்கும் குத்து வெட்டுக்கள் பற்றி பேசவேண்டாமே... பிறகு ஊடக நாகரிகத்தை நாங்கள் மீறிவிட்டதாகவேறு குற்றஞ்சாட்டுவார்கள்.

இந்த இணையத்தள வானொலிகள் பற்றி நாம் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்கள் 'சிலோன் தமிழ நாங்க காது குளிரக் கேட்கணும்| என்று சொல்லி இணையத்தள வானொலிகளை ஆரம்பிப்பதற்கான சகல வசதிகளையும் செய்துகொடுத்தனர். ஆனால் இதுவே இன்று பணம் கறக்கும் ஒரு உத்தியாக மாறிவிட்டது.
இன்று பிரபல வானொலிகளில் அறிவிப்பாளராக இருப்பவர்கள் கூட இந்த விளையாட்டைக் காட்டுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? அவர்களிடம்தான் இவர்கள் அதிகமாக ஏமாறுவார்கள். என் நண்பர் ஒருவர் என்னிடமே கேட்டார் 'நான் Media Course நடத்துறன.; எனக்கு ஆள் எடுத்து தா,. எனக்கு ஒரு இணையத்தள வானொலியும் இருக்கு' என்று. 'நீங்கள்தான் இன்று நல்ல வானொலியில் பெயர்பெற்ற அறிவிப்பாளராக இருக்கின்றீர்களே.. பிறகேன் இணையத்தள வானொலி' என்று... தனக்கென்று ஒன்று இருக்கவேண்டுமாம். அவர் கூறிய ஒரு விடயம் என்னை ஆட வைத்துவிட்டது. அதாவது அவர் வழங்கும் சான்றிதழில் சகல ஊடகங்களிலும் இருக்கும் மேலதிகாரிகள்; ஒரு அரசியல்வாதி என்று கையெழுத்திடுவார்களாம். ஏன் என்றேன். 'எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும். அதற்குதான். இப்படி' என்றார். விடுவார்களா நம் இளைஞர்கள்? தற்போது அவருடைய Media Courseக்கு அதிகமானோர் படையெடுப்பதாகக் கேள்விப்பட்டேன்.

இது தொடர்பாக சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது...
'இணையதளத்தின்; தமக்கு தெரிந்தவற்றைக் கொண்டு பயிற்றுவித்து அறிவிப்பாளர் வடிவத்தை பெற்றுத்தருகின்றோம் என்று கூறும் பல்வேறு தரப்பினரை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஒரு அரச வானொலியில அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற எண்ணத்திலே வருபவர்களை சிலநேரம் இதழியல் என்று சொல்வார்களே அதில் அங்கத்துவம் வகிக்கின்ற படிவத்துடன் நான் அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன். 'ஆறாயிரம் கொடுத்தோம் எண்ணாயிரம் கொடுத்தோம் வேண்டுமானவற்றை சொல்லிக்கொடுத்தார்கள். எங்களுக்கு உரிய இடங்கிடைக்கவில்லை' என்று அங்கலாய்ப்பதை நான் நேரடியாகக் கேட்டிருக்கின்றேன். அவர்களுக்கொல்லாம் ஒன்றை நான் குறிப்பிட விரும்புகின்றேன். இத்துறையிலே பண்பட்டவர்கள் உங்களுக்கு பயிற்றுவிப்பாளராக இருந்தால் இந்தத்துறையில் நீங்கள் முன்னேறிச் செல்லலாம். அதற்காக இப்போது பயிற்சியளிப்பவர்களை திறமையற்றவர்கள் என்று சொல்லவில்லை. நாம் ஒருவருக்கு பயிற்சியைக் கொடுக்கும்போது நாம் அதிலே ஆழ்ந்த சிந்தனை உடையவர்களாக மாத்திரமல்லாமல் அதிலே முழுமையாக எங்களை அர்ப்பணிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அதிலே சற்றுப் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். பணம் உழைக்கவேண்டும் என்ற எண்ணத்திலே இத்தகைய பணிகளில் ஈடுபட்டால் ஆர்வத்தோடு இத்துறைக்கு வரும் இளையதலைமுறை அறிவிப்பாளர்களுக்கு சரியான வழிகாட்டல்கள் இல்லாமல் போய்விடும். முதலில் உங்களுடைய தமிழைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அந்தத் தமிழைக் காப்பாற்றக்கூடிய பணியினை உங்களுக்கு பயிற்சி தருபவர்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

இவர் கூறியதைப்போல பணத்தை மட்டும் இலக்கு வைத்து அறிவிப்பாளர் பாடம் நடத்துவோரிடம் நாம்தான் நிதானமாக இருக்கவேண்டும். அறிவிப்பாளர் ஆகியே தீரவேண்டும் என்றால் இவரைப்போல எத்தனையோ மூத்த அறிவிப்பாளர்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள் அவர்களிடம் சென்று அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு உங்கள் ஆர்வக் கோளாறுக்கு வழிதேடலாமே. தயவுசெய்து ஊடக மயக்கத்திலிருந்து வெளியே வாருங்கள்.

இல்லை. நீங்களும் இணையத்தள வானொலி ஆரம்பிக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாறு உங்களை விட்டுப்போகாவிட்டால் இந்த http://www.youtube.com/watch?v=EDm8JkcmA84&feature=player_embedded முகவரிக்குச் சென்று எவ்வாறு இலவசமாக இணையத்தள வானொலிகள் ஆரம்பிக்கலாம் என்ற வீடியோக் காட்‌சியைப் பார்த்துவிட்டு நீங்களும் இலவசமாக ஒரு இணைத்தள வானொலிக்கு சொந்தக்காரர்களாகலாம். இதிலும் தனியாக இணைய வானொலி செய்யலாம். http://www.ustream.tv/discovery/live/all

நீங்களும் பதிவரா? ஒரு இலட்சம் பரிசு வெல்லுங்கள்.


நீங்களும் பதிவரா? ஒரு இலட்சம் பரிசு வெல்லுங்கள்.

Sunday, May 22, 2011

பெண் படைப்பாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு


சிறந்த படைப்புகளுக்கு சன்மானம் வழங்கப்படும்

பெண்களின் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்ணியக் கருத்துக்கள் சார்ந்த, சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த எங்கள் அன்னையார் அமரர் திருமதி யோகா யோகாம்பிகை அவர்கள் புற்றுநோய் காரணமாக சென்ற ஆண்டு 2010 யூலை 18ம் நாள் தமது 55வது வயதில் காலமானார். எங்கள் அன்னையின் ஆத்மார்த்த வேண்டுகோளின் நினைவாக, ஆண்டுதோறும் நூல் வெளியீடுகளை மேற்கொள்வதென்று தீர்மானித்திருந்தோம்.

அவ்வகையில், அன்னாரின் முதல் ஆண்டு நினைவாக பெண்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் “பெண்கள் படைப்புக்களின் தொகுப்பு” ஒன்றினை வெளிக்கொணர வேண்டுமென்ற எமது ஆதங்கத்தின் பொருட்டு கவிதை, சிறுகதை, கட்டுரை, திறனாய்வு, ஓவியம் போன்ற பல்வகை ஆக்கங்களையும் பெண் படைப்பாளிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். தரமான படைப்புகளுக்கு ஊக்கிவிப்புச் சன்மானமும் வழங்கப்படும்.

ஆகையினால் சிறந்ததென நீங்கள் தீர்மானிக்கும் உங்களது (ஒன்றுக்கு மேல் இருந்தால் சிறப்பு) ஆக்கங்களை 2011 மே 31ந் திகதிக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்.

ஆக்கங்களை அனுப்பிவைப்பதற்கான முகவரிகள்:
E- mail: ranjani@bluewin.ch sasa59@bluewin.ch ag.yoga@hotmail.com

தபால் முகவரி:
Jeyaranjinee Gnanadas, 121 Hamden lane, Wellawatta, Colombo 6.
A.G.Yoharaja Mehala Hasini > Rumiweg 40, 4900 Langenthal, Switzerland.
Tel: 0041 62 923 13 11 / 0041 79 758 47 07


நூல் வெளியீடு: 2011 செப்ரம்பர் 03ம் நாள் சுவிற்சலாந்தில் இடம்பெறும். தொடர்ந்து இலங்கை, இந்தியாவிலும் மேற்கொள்ளப்படும்.

Sunday, May 15, 2011

மூடநம்பிக்கையின் முடிச்சுக்கள் எப்போது அவிழ்க்கப்படும்?


“மூடநம்பிக்கைகள் வளரக்காரணம் நமது மனம்தான்"


- முஹம்மட் பிறவ்ஸ்

நாம் மூதாதையர்களின் வாழ்க்கைக் கோலத்தைப் பின்பற்றுகின்றோமோ இல்லையோ… அவர்கள் விட்டுச்சென்ற மூடநம்பிக்கையினை மட்டும் பின்பற்றுகின்றோம். ஒரு காரியத்தை செய்யக்கூடாது என்றால் ஏன் ஏதற்கு என்று யோசிப்பதில்லை. அவர்கள் செய்யவில்லை அதனால் நாமும் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கின்றோமே தவிர அதன் உள்ளீட்டு விடயங்களை ஆராய்வதில்லை. அதுமட்டுமில்லை அவர் செய்த (மடத்தனமான விடயங்கள் என்றாலும் பரவாயில்லை) விடயங்களை அப்படியே பின்பற்றி ஒழுகுகின்றோம். இது அதிகமாப் பின்பற்றப்படுவது கிராமங்களில்தான். நகருக்குள் வந்த மக்கள் அதன் யதார்த்தங்களைப் புரிந்துகொண்டுள்ளார்கள். மக்கள் இதனைப் பின்பற்றுகின்றார்கள் என்றால் மூதாதயர்களைப் பழிசொல்ல முடியாது. அவர்களது காலத்தில் கல்வியறிவு குறைவு. ஆவர்கள் தங்களுக்குள் ஒரு எல்லையை நிர்ணயித்துக்கொண்டு அதற்குள் வாழ்ந்தார்கள். அதனை நாம்தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

“பூனை குறுக்கே சென்றால் பயணம் சரிவராது, காகம் வெள்ளை நிறத்தில் எச்சில் போனால் அபிவிருத்தி, மாலையில் அரிசி, பருப்புகளை கடன் கொடுக்கக் கூடாது, வியாபாரத்தில் முதலில் நல்ல கையுள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் பண்ணவேண்டும்” இப்படி கோடிக்கணக்கான மூடநம்பிக்கைகள் எம்மிடையே காணப்படுகின்றன. பூனைக்கு அவசரம் என்பதால் அது குறுக்கே செல்கிறது. அதற்கும் நமது பிரயாணத்திற்கும் என்ன சம்பந்தம்? அப்படியென்றால் தற்போது பிரயாணங்களில் ஏற்படுகின்ற அனைத்து விபத்துகளுக்கும் இந்த “அப்பாவி பூனைதான்” காரணமா? எங்கோ இருக்கின்ற பூனையை இங்குள்ள ஒரு சம்பவத்துடன் ஒப்பிடுவைப் பார்க்கையில் சிரிப்புத்தான் வருகின்றது. காக்கையின் எச்சம் தலையில் பட்டால் அபிவிருத்தி இலங்கை ஏன் அபிவிருத்திக்கு இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும். பேசாமல் காக்கைகளை வளர்த்து அதன் எச்சங்களை எம்மீது படவைக்கலாமே… என்ன உலகம் இது.

அயலவன் ஒருவன் பசித்திருக்க நாம் மட்டும் புசிப்பதற்கு மூதாதையர்கள் மேல் பழியை போட்டு மாலையில் கடன் கொடுக்கக்கூடாது என்கின்றோம். கடனில் இரவுக்கடன், பகல் கடன் என்றெல்லாம் வேறுபாடு இல்லை. வியாபாரம் பெருகவேண்டுமாயின் விற்பனை அதிகரிக்க வேண்டும் வேறொன்றும் இல்லை.

இதுபோலத்தான் ஜோசியமு;. நம்மில் பலர் ஜோசியத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம். காலை எழுந்தவுடன் இன்றைய நாள் எப்படி நமக்கு அமைகின்றது என்பதைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்தடுத்த வேலைகளைச் செய்கின்றோம். நமது எதிர்காலத்தை அல்லது ஆயுளை ஒருவரால் எதிர்வு கூறமுடியும் என்றால் ஏன் அவரால் நம்நாட்டு நடப்புகளை எதிர்வுகூறமுடியாது போகின்றது. இல்லையில்லை, எதிர்வுகூற முடியும் என்றால் நான் உங்களை ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்துவதற்கு முன்னர் அவற்றை மக்களுக்கு அறிவித்து பாரிய அழிவுகளில் இருந்து மக்களை விடுவித்திருக்கலாமே. உங்கள் எல்லோருக்கும் ஞபாகமிருக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கதான் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்றார். ஆனால், நடந்தது என்ன?

நான் ஜோசியர்களின் தொழிலுக்கு ஆப்புவைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஒருவர் ஜோசியம் சொல்கிறார் என்றால் அவர்களது கையில் ஏதோ ஒரு புராண ஏடு இருக்கும். இது காணாமல் போனால் தொழில் அம்போதான். அப்படி என்றால் நாங்கள் நினைப்பதை சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். ஒருவருடைய மனதை நாம் அறிவது ஒருவகையான கலை. இதை நீங்கள் கூட செய்யலாம். பின்னர் ஒருவருடைய எண்ணங்களை உங்களால் யூகிக்கமுடியுமானால் நீங்களும் ஜோசியர்தான். நாம் ஒருவிடயத்தைப்பற்றி யோசிக்கும்போது நமது மூளை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்னுடன் அதிருகின்றது. இதை நம்மால் உணரமுடியாது. இதை சிறந்ததொரு உதாரணம் மூலம் விளக்கலாம். நம்மில் இருவர் ஒரு விடயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது குறித்தவொரு செக்கனில் இருவரும் ஒரே விடயத்தைப் பற்றிப் பேச வாயெடுப்போம். ஒருவர் நீ என்ன சொல்ல வந்தாய் என்று கேட்க மற்றவர் பதிலளிக்கும்போது அட நான் கூட இதைத்தான் சொல்ல வந்தேன் என்பார்கள். இருவரும் ஒரு கணத்தில் ஒரே விடயத்தைப் பேச விளைந்துள்ளார்கள். அங்கு நடந்தது என்ன? இருவருடைய மூளையுமே ஒரே அதிர்வெண்ணில் அதிர்ந்துள்ளன. இது ஏனைய ஒருவரின் அதிர்வெண்களுடன் பொருந்தாது. அவ்வாறு பொருந்தினால் நாம் பைத்தியக்காரர்களாகி விடுவோம். ஓவ்வொருவருடைய மூளையும் ஒவ்வொரு அதிர்வெண்களில் அதிருகின்றன.

ஒரே இடத்தில் ஒரு விடயத்தைப் பற்றிப் பேசும்போது சிலவேளைகளில் மட்டும் இருவருடைய மூளையின் அதிர்வெண்கள் ஒருங்கிசைந்துபோகின்றன. நாம் மனதை ஒரு நிலைப்படுத்தி பலவிதமான உளவியல் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இன்னொருவருடைய மூளையின் அதிர்வெண்னுடன் நமது மூளையின் அதிர்வெண்ணை ஒருங்கிசைக்க முடியும். இதனையே ஜோசியகர் கடைப்பிடிக்கிறார்கள். நாம் தூக்கத்தில் இருந்தவாறு ஜோசியம் கேட்பதில்லைதானே. நாம் ஜோசியரிடம் செல்லும் போது நமது பிரச்சினைகள், அவர் என்ன சொல்ல வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோமோ அவற்றையும் நினைத்துக் கொண்டுதானே செல்கின்றோம். அப்போது நம் மனதில் உள்ளதை அவர் பட…பட…வென சொல்ல நமது உச்சி குளிர்ந்து போகின்றது. வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டுமானால் கடவுளிடம் கேளுங்கள். அல்லது நம்மைப் பற்றி பிறர் ஒருவர் கூறவேண்டுமானால் உங்களைப் பற்றித் தெரிந்த ஒருவரிடம் கேட்டு திருப்தியடைந்து கொள்ளுங்கள்.

ஒருவருடைய மூளையின் அதிர்வெண் இன்னொருவின் மூளையின் அதிர்வெண்ணுடன் ஒருங்கிசைவதால் ஒருவருடைய எண்ணங்களை மற்றவர் புரிந்து கொள்ளலாம் என்பதை நம்புவதற்கு மறுப்பவர்களுக்கு சிறியதொரு சம்பவத்தைக் கூறுகின்றேன். வானொலிகள் எவ்வாறு இயங்குகின்றன என நீங்கள் சிந்தித்ததுண்டா? வானொலிப்பெட்டியை நீங்கள் கழற்றிப் பார்த்தால் தெரியும். வானொலியில் அலைவரிசையை மாற்றும் (வுரநெ) பொத்தான் இறுதியாக ஒரு சதுர வடிவிலான சிறிய பெட்டி ஒன்றுடன் தொடர்புபட்டிருக்கும். அந்தப் பெட்டியை உன்னிப்பாக அவதானித்தால் அவற்றில் மெல்லிய பொலித்தீன் போன்ற ஒரு பொருள் பல பல தட்டுக்களாக அடுக்கப்பட்டிருக்கும். வானொலி அலைவரிசையை மாற்றும் போது அவற்றுக்கிடையிலான தூரம் வேறுபடுவதை நீங்கள் அவதானிக்கலாம்.

வானொலி நிலையங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அலைவரிசையில் தமது நிகழ்ச்சிகளை ‘ஒலி’ வடிவில் அனுப்புகின்றது. அவை காற்றில் அந்தந்த அலைவரிசைகளுக்கேற்ப அதிர்ந்து செல்கின்றன. இவை மெகாஹேட்ஸ் அளவுகளில் இருப்பதனால் அதை நம்மால் உணரமுடியாது. மனிதனால் குறிப்பிட்ட அளவான அதிர்வெண்ணுடைய அலைகளை மட்டுமே உணர (கேட்க) முடியும். வானொலி நிலையங்களில் அலைவரிசை தொடர்சியாக சென்று கொண்டிருக்கும் போது நாம் வானொலிக்பெட்டியை இயக்கினால் அலைவரிசையை மாற்றும் ஆளியின் திரும்பலுக்கேற்ப அலவரிசை மாறுபடும். இந்த இரு அலைவரிசைகளும் ஒரே அதிர்வெண்ணில் இருக்கும் போது வானொலிப்பெட்டி பாட ஆரம்பிக்கின்றது. அலவரிசையை மாற்றும் உபகரணத்திலுள்ள மெல்லிய இழைகளின் தூரம் மாறுபடும் போது அவற்றின் அலைவரிசை (அதிர்வெண்) களும் மாறுபடுகின்றன. இது உதாரணமாக 94.5 மெகாஹேட்ஸ் எனும் அதிர்வெண்ணுடன் அதிர்ந்தால் அந்த அலைவரிசையில் எந்த வானொலி அப்பிரதேசத்தில் தனது அலைகளை வெளிப்படுத்துகின்றதோ அந்த வானொலி ஒலிபரப்பும் வானொலி நிகழ்ச்சிகளை நம்மால் கேட்கக் கூடியதாகவுள்ளது.

சரி, சம்பவத்துக்கு வருவோம். உங்களுக்குத் தெரியும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. அலைவரிசை குறிப்பிட்ட அளவுக்குள் (89.5-108 மெகாஹேட்ஸ்) வரை மட்டுப்பட்டிருப்பதால் ஒவ்வொரு, இடங்களும் ஒவ்வொரு அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வானொலியின் அலைவரிசைகள் அருகருகே சிறியளவிலான மாற்றங்களுடன் இயங்குகின்றன. அது மட்டுமல்லாது ஆறு, யுஆ, அலைவரிசைகளிலும் வானொலிகள் இயங்குகின்றன. அங்கு மிகக்குறைந்த அலைவரிசைகளில் வானொலி நிலையங்கள் தங்களது ஒலிபரப்புக்களை மேற்கொள்கின்றன. இவ்வாறானதொரு வானொலி குறைந்த அலைவரிசையில் தனது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் சமயத்தில், அந்த ஊரில் உள்ள ஒரு வீட்டில் தேநீர் தயாரிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் நீரைக்கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அது கொதிக்கத் தொடங்கியதும் கொதி நீராவியின் மேலீட்டால் பாத்திரம் மூடப்பட்டுள்ள மூடி அதிரத் தொடங்கியது. அந்த அதிர்வெண் அந்த வானொலி நிலையத்தின் அதிர்வெண்ணுடன் ஒத்துப்போனதால் அந்தப் பானை பாடத்தொடங்கிவிட்டது. நம்மவர்கள் கண்டால் அடடா என்ன அதிசயம் என்று நினைத்து சடங்கே நடத்தியிருப்பார்கள். நமது சுண்டுவிரலை காற்றில் அதே அதிர்வெண்ணுடன் அசைக்க முடியுமென்றால் நமது விரல் கூட பாட ஆரம்பித்துவிடும். இது உயிருள்ள எந்த ஜீவராசிகளாலும் முடியும் என்றால், எங்கு திரும்பினாலும் பாட்டுச்சத்தமாகவே இருந்திருக்கும். கடவுள் எம்மைக் காப்பாற்றி விட்டார். அதற்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

மூட நம்பிக்கைகள் வளரக் காரணம் நமது மனம்தான். நம் மனதில் ஒரு விடயத்தை ஆழமாகப் பதிந்துவிட்டால் யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம். அது அந்தளவுக்கு ஊறிப்போய் விட்டதுதான் காரணம். நமக்கு பாட்டி ஒரு பேய் கதை சொன்னால் நாம் இரவில் கூட வெளியேற மாட்டோம். அந்த இரவு பேய் வரும் என்றில்லை. இரவானால் பேய் வரும் என்ற நம்பிக்கை தான் காரணம். இவ்வாறுதான் அதிகமானவர்களுக்கு மனவியாதிகள் ஏற்படுகின்றன. இவற்றைப் பரிகாரிகள் தான் குணமாக்குவார்கள் என்றொரு நம்பிக்கை தொன்றுதொட்டு வருகின்றது. நாம் அவர்களிடம் போனால்தான் அவை குணமும் ஆகின்றது. இதற்கு என்ன காரணம் வேறொன்றுமில்லை, நமது நம்பிக்கைதான் காரணம். நாம் குணமாகும் என்று நம்பிக்கை வைக்கின்றோம். அவை குணமாகின்றது. பிரச்சினை நம் மனதில்தான் இதற்கு பின்வரும் சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமையும்.

ஒரு பெண்மணி தான் பலகாரம் சாப்பிடடுக் கொண்டிருக்கும்போது அதன் வன்மைத்தன்மை காரணமாக பலகாரம் கடிபடும் போது பல்லும் உடைந்துவிட்டது. உடைந்த பல்லைக் காணவில்லை. வெளியே வந்து வாயில் இருந்ததை உமிழ்ந்து பார்த்தார். அங்கும்காணவில்லை. அப்பெண்மணி வைத்தியர்களைவிட பரிகாரிகளையே அதிகமாக நம்புபவராக இருந்தமையினால் தனது பிரச்சினையை ஒரு பரிகாரியிடம் முன்வைக்கின்றார். அப்பரிகாரி என்ன செய்கின்றார் தெரியுமா? தான் வெற்றிலை பாக்கை மென்று கொண்டிருக்கும்போது தனது வாய்க்குள் ஒரு செயற்கைப் பல்லையும் வைத்துக்கொண்டு அவற்றை “படிக்கம்” என்றழைக்கப்படும் ஒரு பாத்திரத்தினுள் உமிழ்கின்றார். பின்னர், அப்பெண்மணிக்கு ஏதோ மந்திரம் (என்ன பாஷை என்று தெரியவில்லை) ஒன்றை ஓதி ஒரு தண்ணீர் கிளாசைக் கொடுத்து அதில் வாயைக் கொப்பளிக்குமாறு கூறுகின்றார். அப்பெண்மணியும் அதை நம்பி அப்படியே செய்கின்றார். பின்னர், அப்பாத்திரத்தை வெளியே சென்று கழுவி வருமாறு கூறவே, அப்பெண்மணி பாத்திரத்தை கீழே கொட்டும் போது அதில் ஒரு பல் விழுந்து கிடப்பதைக் காண்கின்றார். உடனே, அதைக் கழுவி எடுத்துக்கொண்டு அவரிடம் கொடுக்கின்றார். அப்பெண்மணிக்கு பல்லைக் கண்டதுமே மூன்று நாளாக இருந்துவந்த வயிற்று வலியும் நீங்கிவிட்டது. நோய்க்கு நிவாரணம் கிடைத்தாயிற்று, பிறகென்ன பணத்தைக் கட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.

மேற்படி, சம்பவத்தை நாம் ஆராயும் போது சில விடயங்கள் நாம் உற்று நோக்கினால் அது எந்தளவுக்கு மூடத்தனமானது என்று விளங்கும் பரிகாரி தான் வாய்கொப்பளித்த பாத்திரத்தையே ஏன் கொடுக்கவேண்டும்? அது வெற்றிலை பாக்கு சுவைத்த வாயை கழுவிக் கொப்பளிக்கின்றார். வெறுமையான தண்ணீர் பாத்திரம் என்றால் அதுதான் காட்டிக்கொடுத்துவிடுமே. அதுவும், உடனேயே பரிகாரம் பண்ணாமல் பிரிதொரு தினத்தில் வரச்சொல்லுவது எதற்காக? பெண்ணின் பக்கம் சென்று பார்த்தால் வீட்டிலே எவ்வளவோ வாய்கொப்பளித்தும் பல்லைக் காணாததால் வயிற்றுவலி நிற்கவில்லை. ஆனால் பரிகாரியிடம் சென்றபின் பல்லைக் கண்டவுடனேயே வயிற்றில் இருந்து ஏதோ ஒன்று வெளியேறியது போல பிரமிப்பு, வயிற்று வலியும் குணமாகிவிடுகின்றது. நடந்தது என்ன? அதிசயம் எதுவுமே நிகழவில்லை. பெண்மணி பரிகாரியை நம்பினார். பரிகாரி தனது தந்திரத்தை நம்பினார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் இது ஒரு கட்டுக்கதை என்று நினைத்தவிடாதீர். அந்த பரிகாரியிடம் பணியாற்றிய சிஷ்யன் ஒருவர் பகிரங்க விளக்கக்கூட்டம் ஒன்றில் கூறிய சம்பவமே இது…. நம் மனதை எது ஆளுகின்றதோ அதற்கு நாம் இலகுவாக கட்டுப்பட்டு விடுகின்றோம். இதுதான் யார்த்தமான உண்மை.

சம்பவம் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் அஸ்லம் பாபாவுக்கு நடந்த சம்பவம் உங்களில் அனேகமானவர்களுக்கு தெரிந்திருக்கும். இறைச்சிக்கடை வைத்திருந்த ஒருவர் பரிகாரியான கதை. ஆங்கில வைத்தியமுறைகளால் தீர்க்கமுடியாமல் போன நோய்களும், கைவிடப்பட்ட நோயாளிகளுக்கும் தன்னால் பரிகாரம் வழங்கமுடியும் எனக் கூறி பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி வந்தான். நடக்கவே முடியாத நோயாளிகளுக்கு கதிரைகளால் அடித்தான், அவர்கள் வைத்திருந்த தடிகளைப் பிடுங்கி அடித்தான். இதனால், நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்களும் அதனைத் தாங்கிக் கொண்டனர். நோயாளிகளின் வயிற்றில் உள்ள கட்டிகளை எந்தவிதமான கீறல்களும் இல்லாமல் வெளியே எடுத்தான். அவனிடம் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போனார்கள் அவனது புகழ் சர்வதேச மட்டத்தில் கூட சென்றுவிட்டது. இதன் உள்ளக விடயங்களை அறியும் பொருட்டு விஜய் ரிவியின் “குற்றம் நடந்தது என்ன?” எனும் நிகழ்ச்சிக்குப் பொறுப்பானவர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து அவனது கொடுமைகளையும், தந்திரங்களையும் விடியோ எடுத்து அம்பலமாக்கினார்கள் பின்னர், அவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டான்.

அங்கு நடந்தது இதுதான் காயமில்லாமல் வயிற்றுக்குள் கட்டியை எடுக்கின்றேன். ஏன்று கூறி தனது மடியின் கீழுள்ள இறைச்சித்துண்டுகளை யாருக்கும் தெரியாமல் லாவகமாக வெள்ளைக் கடதாசியினுள் எடுத்துக் கொண்டு, கட்டி எடுக்கவேண்டிய இடத்தில் அதை வைத்துக்கொண்டு கத்தரிக்கோலினால் கடதாசியைக் குடைந்து அந்த இறைச்சித்துண்டை வெளியே எடுத்து இதுதான் உங்களிடம் இருந்த கட்டி என்கிறான். இதை அறியாத அப்பாவிப் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அவனிடம் வைத்தியம் பார்த்தனர். இக்காட்சி விஜய் ரிவியின் கமராவுக்குள் அகப்படவே அவனது பிழைப்பு நாறிப்போனது.

அண்மைய சூரிய கிரகணத்தின்போது சுனாமி வரும் அல்லது பாரியளவிலான இயற்க்கை அனர்த்தம் வரும் என்று பல ஜோசியர்கள் எதிர்வு கூறினார்கள் குறிப்பாக அனர்த்தம் நிகழும் காலத்தை தெளிவுபடுத்திக் காட்டியிருந்தார்கள். இவர்களை நம்பிய பல அப்பாவிப் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டும் குடியகழ்ந்து சென்றனர். ஈற்றில் நடந்தது என்ன? தேவையில்லாத மனப்பீதிகளை கட்டிவிட்டதுதான் மிச்சம் மனிதன் நினைப்பது எல்லாம் நடந்தால், அதுவும் அந்த காலகட்டத்திலேயே நடந்தால் கடவுள் என்றொருவர் தேவையில்லைத்தானே? நாம் எதிர்பாராதநேரத்தில் எதிர்பாராத சம்பவம் நடப்பதுதான் கடவுள் நம்பிக்கைக்கு அத்திவாரம்.

நான், மனதில் எதை நினைக்கின்றோமோ அதுதான் மூடநம்பிக்கை வளரக் காரணமாகின்றது. உதாரணமாக சிறுவயதில் நமக்குப் பாட்டி பேய்க்கதை சொன்னால் இரவில் வெளியே செல்லமாட்டோம். ஏனென்றால், காண்பதெல்லாம் பேய் போலத்ததன் இருக்கும் நம்மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் அதை மனதிலிருந்து அழிக்காதவரை அதற்கான பரிகாரத்தை தேடமுடியாது. நமது மனம்தான் நமக்குத் தெரியும், நண்பனும் நமது மனதை நம்மால் ஆளமுடியுமானால் நாம்தான் மேம்பட்ட மனிதர்கள்.

ஒசாமா பின்லேடன் எத்தனை தடவைகள் கொல்லப்படுவார்?


- முஹம்மட் பிறவ்ஸ்

அமெரிக்காவால் பிடிக்கமுடியாமல் இருந்த ஒசாமா பின்லேடன் அண்மையில் கொல்லப்பட்டுவிட்டதாக பராக் ஒபாமா அறிவித்திருந்தார். டீ.என்.ஏ. பரிசோதனை மூலம் இவரது உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய உளவுத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் டோராபோரா மலையில் அவரைக் கொன்ற அமெரிக்கா தற்@பாது பாகிஸ்தான் வரை கொன்று கொண்டுதான் இருக்கின்றது.
பல வருடகாலமாக சல்லடை போட்டுத்தேடிய அமெரிக்காவுக்கு ஒசாமாவின் ஒரேயொரு படத்தை மட்டும்தான் காட்டமுடிந்ததா? தனது நாட்டை துவம்சம் செய்த அவரை சர்வதேசத்திற்கு அடையாளம் காட்டி அவரது மரணம் ஏனையோருக்கு (முஸ்லிம்களுக்கு) பாடமாக இருக்குமென அச்சமூட்டி எச்சரிக்கை செய்யமுடியால்போனது ஏன்?

ஒரேயொரு புகைப்படத்தை மட்டும்காட்டி இவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று அமெரிக்கா சொன்னால், நாமெல்லாம் நம்பத்த தயாராக இருக்கின்@றாம் என்ற நம்பிக்கைதான் காரணம். அவர்கள் வெளியிட்ட அந்த ஒரேயொரு புகைப்படத்தை உங்களால் நம்பமுடிகின்றதா? ஒரு புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து அதனை மக்களிடம் காட்டி ஏமாத்தியிருக்கிறது என்றால், நம்மில் அனேகமானோர் அதை நம்பத் தயாராக இல்லை. காரணம் டீ.என்.ஏ. ரிப்போர்ட் சொல்கிறது என்று காரணம் கூறுவோம். இதுதான் டீ.என்.ஏ. ரிப்போர்ட் என்று ஊடகங்களுக்கு காட்டப்பட்டதா? இல்லையே, தான் விரும்பியபடி ஒரு டீ.என்.ஏ. ரிப்போர்ட்டை தயாரிக்க முடியாதிருந்தால் உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா இருப்பதில் நியாயமில்லை.

இங்குள்ள புகைப்படத்தை நன்றாகக் கவனியுங்கள். இதுதான் ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டதுக்கு பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் வெளியிட்ட ஒரேயொரு ஆதாரம். இது உண்மையில் இரண்டு புகைப்படங்களுடன் சேர்த்து ஒசாமாவின் உருவத்தைக் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிக்கிறது.

இந்தப் புகைப்படம் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள்.

01. ஒரெயொரு புகைப்படம் மட்டுமே வெளியானது.
02. அதுவும் தலை மட்டுமே காணப்பட்டது.
03. அருகிலுள்ள புகைப்படத்தையொத்த திசையிலேயே அந்தப் படம் உள்ளது.
04. இரண்டிலும் வாயின் அசைவு அப்படியே உள்ளது.
05. வீடியோக் காட்சி வெளிவரவில்லை.
06. தாடி அப்படியே இரத்தக்கறை இல்லாமல், குழைந்துபோகாமல் அதேமாதிரி இருக்கின்றது.
07. உரோமம் (முடி) உயிரற்றது. கொம்புருப்பொருளால் ஆனது. அது ஒருவர் இறந்தவுடன் வாடிப்போய்விடுவதில்லை. நீட்டிக்கொண்டிருந்த ஒசாமாவின் தாடி அவர் இறந்தவுடன் ஏன் முடிங்கிக்கொண்டது?
08. வலதுபக்கம் தாடியின் கரைப்பகுதியில் Photoshop Eraser Tool பயன்படுத்தப்பட்டுள்ளது.
09. இடதுபக்கம் தாடியின் ஓரப்பகுதியை மறைப்பதற்காக புகைப்படம் வெட்டப்பட்டுள்ளது. (ஒசாமா பின்லேடனின் தாடி சீராக ஒருபோதும் இருந்ததே இல்லை. எப்போதும் வெளியில் நீட்டிக்கொண்டுதான் இருக்கும். Photoshop மென்பொருளைப் பயன்படுத்தி அந்தப் புகைப்படத்தை வடிவமைத்த அந்த "டிசைனருக்கு' அவரது தாடியில் நீட்டிக்கொண்டிருக்கும் முடிகளை வெட்ட சிரமமாக இருந்திருக்கும்)
10. அடுத்த புகைப்படத்தில் அதே கண்ணில் காயம்பட்ட மனிதருடன் அவரது முகபாவணையும் ஒத்துப்@பாகின்றது.
11. முதலாவது படம் ஒசாமாவின் படத்துடன் மூக்குக்கு மேலும் இரண்டாது படம் மூக்குக்கு கீழும் Photoshop மென்பொருளில் உள்ள "குளோனிங் டூல்' பயன்படுத்தப்பட்டு செய்யப்பட்டுள்ளது.
12. படத்தின் கிழுள்ள பகுதி ஒரு நிறத்திலும் மேலுள்ள பகுதி இன்னொரு நிறத்திலும் காணப்படுகின்றது.
13. ஒரே படத்தில் இருவேறு `Pixcel' அளவுகளில் படங்கள் இருக்கின்றன.

இரத்தக் கறையுடன் அரைக்கண் திறந்து காணப்படும் அவரது புகைப்படம் போலி என்றும் இது 2 ஆண்டுகளுக்கு முன்பே பல இணையத்தளங்களில் வெளியானது என்றும் தற்@பாது தெரியவந்துள்ளது. 1998ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பின்லேடனின் புகைப்படத்துடன் அடையாளம் தெரியாத ஒருவரின் புகைப்படம் இணைத்து உருவாக்கபட்டதுதான் இப்படம். இதுவே பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.

பின்லேடனை ஓரிடத்தில் அடக்கம் செய்தால்,அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறிவிடும் என்று அமெரிக்கா அஞ்சி சடலத்தை புதைக்காமல் கடலில் வீசிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. பத்து வருடமாக அமெரிக்காவுக்கு தண்ணிகாட்டிய பின்லேடனை ஒரு புகைப்படம்கூட எடுக்காமலும் ஊடகங்களுக்கு காட்டாமலும் கடலில் வீசிவிட்டதாகச் சொல்ல்வது தான் ஆடிய நாடகத்தை அப்படியே அம்பலப்படுத்துவதாக@வ காணப்படுகின்றது.

ஒபாமா பின்லேடன் கொல்லப்படுவதை நேரடியாகப் பார்த்ததாகவும் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளார். இந்தப் படங்களை வெளியிட்டால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமையுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பின்லேடனின் மரணம் சமூக வலையமைப்புத் தளங்களில் பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக, அமெரிக்க ஆதரவாளர்களால் சில விசமத்தனங்களும் பேஸ்புக்கில் அரங்கேற்றப்பட்டன. Osama Killed Live Video எனும் பேஸ்புக் பேஜஸ் மூலம் "ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நேரடி வீடியோக்காட்சி' என்று எமது நண்பர்கள்மூலமாக நமக்கு அந்த லிங்க அனுப்பப்பட்டது. அந்தப் பக்கத்திற்குச் சென்றால் அங்குள்ள பேஜை `லைக்' பண்ணிவிட்டு அங்குள்ள அட்ரஸை, அட்ரஸ்பாரில் கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுமாறு சொல்லப்பட்டது. அவ்வாறு பேஸ்ட் பண்ணியதும் 2+3=? எத்தனை என்று கேட்கப்படுகின்றது. அதற்கு நம்மால் பதில் அளிக்க முடியாமல் செய்யப்பட்டுள்ளது. கொஞ்சம் நேரம் பொறுத்திருக்குமாறும் சொல்லப்படுகின்றது. பின்னர் நாம் பின்லேடனின் வீடியோவைப் பார்த்துவிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதாக நமது Wall இல் Share ஆகுகின்றது. அதை பிறிதொருவர் கிளிக் செய்தால் மீண்டும் 2+3=? என்ன என்று கேட்கிறது. தற்பொழுது அந்த பேஜ் பேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இப்போதும் தனது சின்னப்பிள்ளைத் தனத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றது.

பின்லேடன் கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். அதன் உண்மைத்தன்மை பற்றி நமக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆனால், இந்த புகைப்படத்தை வெளியிட்டு பூச்சாண்டி காட்டியது ஏன்? இதன் பின்னணி என்ன? ஒபாமா முஸ்லிம் ஆதரவாளர் என்றொரு கருத்தும் நிலவுகின்றது. அவர் ஒபாமாவின் உயிரைக் காப்பாற்றி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாரா? அல்லது அவர் தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல "நான் பின்லேடனைப் பிடிப்பேன்' என்பதைக் நிரூபித்துக்காட்ட நினைத்தாரா?

ஆகமொத்தத்தில் அமெரிக்கா, தான் என்ன சொன்னாலும் உலகநாடுகள் கேட்க்கும் என்பதை ஒரு புகைப்படம் மூலமாக நிருபித்துக் காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் இந்த கபட நாடகம் நம்மில் அனேகமானோருக்குத் தெரிந்திருக்கி நியாயமில்லை.

இந்த ஆதாரங்களை எனது பேஸ்புக்கில் நான் பகிரங்கமாக வெளியிட்டபோது எனது பேஸ்புக் கணக்கையும் சில விசமிகள் (அமெரிக்க ஆதரவாளர்கள்) ஹெக் செய்துவிட்டனர். பிறகு நான் ஒருவழியாக எனக்குத் தெரிந்த வழியில் எனது பேஸ்புக் கணக்கை மீட்டெடுத்துக் கொண்டேன். நாம் உண்மைகளைக் கூறுவதற்கு விளையும்போது எத்தனை ஆபத்துக்கள் நம்மீது ஏவப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் ``ஒரு ஊடகத்தில் உண்மைகளை
சுட்டிக்காட்டவே முடியாத நிலையில்தான் நாம் ஊடகத்துறையில் பணியாற்றுகின்றோம்.''.

Thursday, May 5, 2011

எச்சரிக்கை!!! Facebook "Osama Virus"





Osama bin Laden Killed (LIVE VIDEO) - “BBC NEWS – Osama bin Laden Killed (LIVE VIDEO)” என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ் இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம். உங்களுக்கு இமெயில் அல்லது பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற சோசியல் தளங்களில் இருந்து மேலே காட்டியபடி ஒரு வீடியோ காட்டப்படும்.



அதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படும் நேரடி வீடியோ காட்சியை யூடியுப் ஒளிபரப்ப அனுமதி கொடுக்காதகாரணத்தால் இங்கு கொடுக்கப்படிருக்கும் முகவரியை சொடுக்கி அந்த வீடியோவை பாருங்கள் என்று இருக்கும் உடன் கொடுக்கப் பட்டிருக்கும் இணையதள முகவரியை எக்காரணம் கொண்டும் சொடுக்க வேண்டாம். நாம் எதையும் தரவிரக்காமல் எப்படி நம் கணினியை வைரஸ் தாக்கும் என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்குள் உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும். அதாவது நாம் உலாவியில் பார்க்கும் இணையதளங்கள் கணினியில் தற்காலிகமாக (Temporary) ஆக சேமிக்கப்பட்டு தான் நமக்கு காட்டப்படும் இந்த வைரஸ் தன் பணியை உலாவி Temporary ஆக சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கூகிஸ் மூலம் நண்பர்களின் இமெயில் முகவரியை எடுத்து அவர்களுக்கும் அனுப்பிவிடுகிறது. முன்னனி ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் கூட விழிபிதுங்கி இருக்கிறது. இதுபோல் ஒசாமா பெயரில் வரும் எந்த இணைப்பையும் (Link) சொடுக்காமல் இருப்பது தான் பிரச்சினை வராமல் தடுக்க ஒரே வழி. உங்கள் நண்பர்களுக்கும் இந்தப்பதிவை கொண்டு செல்லுங்கள்.

Wednesday, May 4, 2011

பின்லேடன் அடக்கம் செய்யப்பட்ட விதம் ஷரியா சட்டத்தை மீறிய செயற்பாடு


அல்ஹைடாவின் தலைவர் ஒசாமா பின்லேடனின் உடலை கடலுக்குள் அடக்கம் செய்வதென அமெரிக்கா மேற்கொண்டிருந்த தீர்மானமானது ஷரியா சட்டத்தை மீறுவதாக

அமைந்துள்ளதாக முஸ்லிம் கல்விமான்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான கார்ள் வின்சனிலிருந்து ஒசாமாவின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் ஷரியா சட்டத்தை மீறியுள்ளதாக விமர்சித்துள்ள முஸ்லிம் கல்விமான்கள் அமெரிக்க நிலைகளுக்கு எதிரான பழிவாங்கல் தாக்குதல்களை இந்த விடயம் தூண்டுவதாக அமையுமென எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, ஏனைய சிலர் கடலில் அடக்கம் செய்த விடயம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். அதாவது இந்த விடயம் கேள்விக்குரியதொன்றாக இருப்பதாகவும் அவர் இறந்தாரா? இல்லையா? என்பது பற்றிய கேள்வியை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஒசாமாவின் உடல் தொடர்பான உண்மையான புகைப்படங்கள் வெளியிடப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்கள் பலரிடமிருந்து பெற்றுக்கொண்ட மரபணுக்களைப் பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த உடல் பின்லேடனுடையதுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

பின்லேடனின் உடல் சிதைவடைந்திருந்ததால் 24 மணிநேரத்துக்குள் அதனை அடக்கம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி கடலுக்குள் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கடந்த காலத்திலும் 24 மணித்தியாலத்துக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்ற விதிமுறை எப்போதுமே கடைப்பிடிக்கப்பட்ட விடயமாக இருந்ததில்லை. உதாரணமாக ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் மகன்மாரான உதே,குவாஷே ஆகியோரின் உடல்கள் பதனப்படுத்தப்பட்டு 11 நாட்களுக்கு வைக்கப்பட்டது . அமெரிக்கப் படையினர் அவர்களைக் கொன்ற 11 நாட்களுக்குப் பின்னரே உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஹுசைனின் மகன்மாரின் உடல்கள் ஊடகங்களுக்கும் காண்பிக்கப்பட்டிருந்தன.

கொல்லப்பட்ட பின்னரான பின்லேடனின் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிடுமா? என்பது தெளிவற்றதாகவுள்ளது. ஒசாமாவின் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தமை இந்த விடயத்தை நம்பாதவர்களின் நோக்கத்தை அதிகரிக்கக் கூடியதாக இருக்குமென்று வடக்கு இலியோனிஸ் பல்கலைக்கழக உளவியலாளர் பிராட் ஷாகன் கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக பராக் ஒபாமா அமெரிக்கப் பிரஜையாகவிருப்பதை நம்ப மறுப்பவர்களும் இருக்கின்றதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே இந்த விடயம் குறித்து பாகிஸ்தானில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. உண்மையிலேயே பின்லேடன் இறந்துவிட்டாரென்பதை நம்புவதற்குப் பலர் விரும்பவில்லை.

நாம் பின்லேடன் இங்கிருந்தார் என்பதை நம்பவில்லையென அபோட்டாபாத்தில் உணவு விடுதியொன்றில் பணிபுரியும் ஹரிஸ் ரஸீத் என்பவர் கூறினார். ஒருவருக்கும் தெரியாமல் அவர் எவ்வாறு இங்கு வந்திருக்க முடியும்? ஏன் அவரை இவ்வளவு விரைவாக அடக்கம் செய்தனர்? இந்த விடயமானது மோசடியான நாடகமாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஒசாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்திருந்தால் அந்த உடல் மீனிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்லாமிற்கு இணங்க தாங்கள் இதனைச் செய்ததாக அவர்கள் உரிமைகோர முடியாது. கடலுக்குள் அடியிலேயே உடலை அடக்கம் செய்திருக்க வேண்டுமென்று ரியாத்தில் ஷரியா சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சௌத் அல் ஹனிசன் கூறியுள்ளார்.

Tuesday, May 3, 2011

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக கூறப்படும் இடம்










பின்லேடன் படம் போலி : கார்டியன் பத்திரிகை உறுதி


வாஷிங்டன், மே 3 பின்லேடன் இறந்ததாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட புகைப்படங்கள் போலி என சில செய்தி நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்லேடன் இறந்த நிலையில் காட்டப்பட்ட புகைப்படத்தின் கீழ்பகுதி அவரது உண்மையான புகைப்படம் என்றும் மேல்பகுதி மற்றொரு சடலத்தின் புகைப்படமாக இருக்கலாம் என்றும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ராணுவ நடவடிக்கையில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையின்போது தெரிவித்திருந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் உடல் கடலில் வீசப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பின்லேடனின் இறந்ததாக வெளியிடப்பட்ட புகைப்படம் போலி என செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்த புகைப்படங்கள் முதலில் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்தது.

அந்தப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பின்லாடனின் குண்டு பாய்ந்த முகம் என்று பாகிஸ்தான் இணையதளம் வெளியிட்ட படத்தை, அனைத்து ஊடகங்களும் எடுத்துக் கொண்ட கொஞ்ச நேரத்தில், அந்த படத்தில் உண்மையில்லை; இரண்டு வருடத்திற்கு முன் இறந்த ஒருவரின் முகத்தோடு 'மார்பிங்' முறையில் உருவாக்கிய படமே இது என்று, அதற்கான ஆதாரத்துடன், லண்டனில் இருந்து வெளியாகும், 'கார்டியன்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. புகைப்பட ஆதாரத்துடன் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒஸாமாவின் வாழ்க்கை குறிப்பு



பாகிஸ்தானில் ரகசியமாக தங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவு பிரிவு படையினர் திடீர் தாக்குதல் நடத்தி வேட்டையாடியிருக்கின்றனர். இதனால் பாகிஸ்தான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் உள் அப்பட்டாபாத்தில் உள்ள ஒரு பங்களாவில் இருந்தபோது கொல்லப்பட்டார். இவரை வேட்டையாடும் அரங்கேற்றம் குறித்து பாக்., அதிகாரிகளுக்கு கடைசிவரை தெரிவிக்கப்படவில்லை . தாக்குதல் ஆப்ரேஷன் முடியும் வரை ரகசியமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பின்லேடன்? : ஒசாமா பின் லேடன், சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் 1957ஆம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்தார். முழுப்பெயர், ஒசாமா பின் முகமது பின் ஆவாத் பின்லேடன். தந்தை முகமது பின் ஆவாத் பின்லேடன் ஒரு வியாபாரி. இவரது பத்தாவது மனைவி ஹமீதாவிற்கு பிறந்த ஒரே மகன் ஒசாமா. இவர், இளவயதிலிருந்தே இஸ்லாத்தில் தீவிர பற்று மிக்கவர்

படிப்பு: ஒசாமா, பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சவுதியில் உள்ள கீங் அப்துல்லாசிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றார் என்றும், 1979ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார் என்றும், 1981ஆம் ஆண்டு பப்ளிக் அட்மினிஸ்டிரேஷனில் பட்டம் பெற்றார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 வயதில் திருமணம்:1974ஆம் ஆண்டு, 17வது வயதில் நஜ்வா கனீம் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதன் பிறகு 3 திருமணங்கள் செய்தார். 25 குழந்தைகள் உள்ளனர்.
பல முறை கொல்லப்பட்டதாக தகவல் : இதற்கு முன், பின்லேடன் பதுங்கு குழியில் இருக்கிறார், இறந்து விட்டார் என்று பல விதமான செய்திகள் வெளிவந்தன. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தது போல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

*டிச.,11, 2005ம் ஆண்டு அல்குவைதாவின் மூத்த உறுபினரான அதியா அப் அல் ரகுமான், ஈராக் போரின் போது ஜோர்டானியன் ராணுவத்தில் இருந்த அபு முசாப் அல் ஜார்குவாவிக்கு கடிதம் அனுப்பினார். அதில் பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் பகுதியில் ஒசாமா இருப்பதாகவும், அவரது படைகள் பலம் குன்றி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
* 2009ஆம் ஆண்டு லாஸ் ஏன்ஜல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவினரான கிளெஸ்பி மற்றும் அக்நியூ, சாட்டிலைட் உதவியுடன் நிலஇயல் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன் இறுதியில் பாகிஸ்தானில் உள்ள பராச்சினர் என்ற நகரின் ஒசாமா இருக்கிறார் என்று மூன்று இடங்களை சுட்டிக்காட்டினர்.
* மார்ச், 2009ல் பாகிஸ்தானின் சித்ரல் மாவட்டத்தில் பின்லேடன் படைகள் இருப்பதாக “நியூயார்க் டெய்லி நியூஸ்’ செய்தி வெளியிட்டது.
* டிசம்பர், 2009ல் பாகிஸ்தானில் தாலிபன் பிடியிலிருந்த ஒரு நபர் ஆப்கானிஸ்தானில் பின்லேடன் இருப்பதாகவும் தான் பார்த்ததாக அறிவித்தார். பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் கிலானி இதை மறுத்தார்.
* ஜனவரி 15, 2010ல், எப்.பி.ஐ., “டிஜிட்டல்’முறையில் வயதான பின்லேடன் எவ்வாறு இருப்பார் என்று போட்டோக்களை வெளியிட்டது.
* ஜூன் 7, 2010ல், குவைதி அல் சியாசா என்ற அமைப்பு ஈரானின் வடகிழக்கு பகுதியில் உள்ள சவ்ஷீவர் பகுதியில் உள்ள மலைகளில் பின்லேடன் மறைந்திருப்பதாக தெரிவித்தது. ஜூன் 9ல் ஆஸ்திரேலியாவில் உள்ள “ஆன்லைன்’ பத்திரிகை இதே கருத்தை வெளியிட்டது.
* அக்டோபர் 18, 2010ல், நேட்டோ படை அதிகாரி ஒருவர், “”பின்லேடன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாக பாகிஸ்தானில் உள்ளார்” என்றார். இதற்கு கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிகாரி, “”பாகிஸ்தான் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. எங்கள் அரசிற்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.” என தெரிவித்தார்.
அல்-குவைதா துவங்கி வளர்ந்த வரலாறு : 1979: ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் என்றத அமைப்பை எதிர்த்து சோவியத் யூனியன் போரிட்டது. இந்த அமைப்போடு பின்லேடனும் இணைந்து கொண்டார்.
1986-87: சோவியத் யூனியனுக்கு எதிரான போரில், முஜாகிதீன் அமைப்பின் , நிதி நிர்வாக தலைவராக செயல்பட்டார். கொரில்லா படை தலைவராகவும் திகழ்ந்தார்.
1988: முஜாகிதீன் அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் துணையுடன் ஒசாமா பின்லேடன், அல்-குவைதா என்ற பயங்கரவாத அமைப்பை தொடங்கினார்.
1989: சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்லேடனும் சவுதிக்கு திரும்பினார். அவரது தந்தையின் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை பார்த்துக்கொண்டார். ஆப்கன் போரில் தனது நெட்வொர்க் மூலம் நிதி ஆதாரத்தை பெருக்கினார்.
1990 ஆக.7: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேற வலியுறுத்தி, ஈராக் படைகளுக்கு எதிராக போரிடுவதற்கு சவுதிக்குள் நுழைய அமெரிக்க அரசு அனுமதி கேட்டது. சவுதி அனுமதியை தொடர்ந்து அமெரிக்க படைகள் ஈராக் படைகளுக்கு எதிராக போரிட்டது. சவுதியின் மெக்கா, மெதினா நகரங்களுக்கு அருகில் அமெரிக்க படைகள் இருப்பதற்கு பின்லேடன் எதிர்ப்பு தெரிவித்தார்.
1991 : சவுதி அரசுக்கு எதிராக போரட்டம் நடத்திய ஒசாமாவுக்கு குடியுரிமையை, சவுதி அரசு ரத்து செய்தது. சூடானில் பின்லேடன் தஞ்சம் அடைந்தார்.
1992, டிச. 29: ஏமன் நாட்டிலுள்ள ஒரு ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் இரண்டு ஆஸ்திரிய சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இது பின்லேடன் மற்றும் அவரது அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது.
1993, பிப். 26: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீது தாக்குதல் நடதத்தப்பட்டது. இதில் ஆறு பேர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1995 கென்யா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. இதில் கென்ய அமெரிக்க தூதரக தாக்குதலில் 213 பேர் பலி, 4,500 பேர் காயம். தான்ஜானியா அமெரிக்க தூதரகத்தில் 11 பேர் பலி, 85 பேர் காயம்.
1996 : அமெரிக்கா மற்றும் சவுதி ஆகிய நாடுகளின் வேண்டுகோளை அடுத்து சூடான், ஒசாமாவை வெளியேற்றியது. இதனால் பின்லேடன் தனது 3 மனைவி மற்றும் 10 குழந்தைகளுடன் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்தார். அமெரிக்காவுக்கு எதிராக “புனித போர்’ நடத்தப்போவதாகவும் அறிவிப்பு.
2000, அக். 12: ஏமனில் கப்பல் வழி தாக்குதல் நடத்தப்பட்டது. 17 பேர் பலி. அல்-குவைதா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
2001, செப். 11: அல்-குவைதா பயங்கரவாத அமைப்பினர், அமெரிக்காவின் 4 விமானங்களை கடத்தி, இரட்டை கோபுர கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3000க்கும் மேற்பட்டோர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்.
2001, அக். 7: அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து ஒசாமா மற்றும் அல்-குவைதா அமைப்பை எதிர்த்து போராடுவதென முடிவெடிக்கப்பட்டது.
2004, அக். : இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக, முதல்முறையாக ஒசாமா பின்லேடன் அறிவிப்பு.
2011, மே 2: அமெரிக்க உளவுத்துறை நடத்திய தாக்குதலில் பின்லேடன் பலியானார் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு.