கடல்அலை எம்மை துவம்சம் செய்து 6 வருடங்கள் ஆகின்றன... புதிரான "சுனாமி" என்ற வார்த்தை இப்போது, அது ஒரு தமிழ் வார்த்தை என்று நம்பப்படும் அளவுக்கு எம்மில் இரண்டறக் கலந்துவிட்டது. அகதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிக்கொடுத்த தினமது. எம்மில் பலர் அந்த தினத்தில் நிர்வாணக் கோலத்தில் பிணக் குவியல்களில் கண்டதை நினைக்கும்போது இப்போதும் எனக்கு அழுகைதான் வருகின்றது.
உறவுக்காக உயிரை கொடுப்பேன் என்று நான் கேள்விப் பட்டுத்தான் இருக்கிறன். அனால், அன்று அதனை என் கண்ணுடாக கண்டது, இரத்தத்தில் எழுதப்பட்ட சுவடுகள். யதார்த்தத்துக்குப் புறம்பாக கடல் அலை எம் வீடு தேடிவந்து எம்மை நாடு வீதிக்கு (பேச்சுக்காக சொன்னேன் நடு வீதி என்று; அந்த வேளையில் வீதிகள் கூட இருக்கவில்லை...) கொண்டு வந்து எம்மை துவம்சம் செய்தது. பட்டவர்கள் எல்லாம் அக்கரையோடு...., தொட்டவர்கள் எல்லாம் சக்கரயோடு ஆனது நிவாரணப் பணிகள்.
எத்தனை வருடம் ஆனாலும் அழியாத வடுக்கள் அது... வருடம் 6 ஆகியும் இன்னும் கரையோர வாழ்மக்கள் எல்லோருக்கும் நிரந்தர வீடுகள் சரியாக கிடைத்த பாடில்லை... இன்றும் அகதி முகாம்களில் மக்கள் வரிசையில் காத்து கழிப்பறை செல்லவேண்டிய நிர்பந்தத்துக்குள் அவர்கள் உள்வாங் கபட்டு இருக்கிறார்கள். பேசுவோர் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள், பார்பவர்கள் பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள். நமது முடிவி நமது கைகளில் மட்டுமே..
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
No comments:
Post a Comment