Wednesday, October 13, 2010

பாட்டுப்பாடவா...

அய்யய்யோ வேணாம்..!!
இந்த பதிலைத்தான் வீட்ல அடிக்கடி சொல்லுவாங்க..!

சின்ன வயசுலருந்து பாடறதுன்னா ரொம்ப ஆசை.
ஆனா,அது கேக்கறவங்களுக்கும் இருக்கணுமே...

தயவு செஞ்சு பாடாதே..!! வேணாம்..!! விட்ரு...!!
கழுதை கத்தற மாதிரியே இருக்கு..!!


தூங்கிருவோம்...குழந்தை பயந்துக்கும்...


இப்டி எல்லாம் சொல்லியே ஒரு மைக்டைசனை ச்சீ...
மைக்கேல் ஜாக்ஸன முடக்கி வச்சுட்டாங்க...


நம்மளும் ஒரு SPB, யேசுதாஸ், ஹரிஹரன் மாதிரி
ஆகலாம்ன்னு பாத்தா யாராவது ஒருத்தர் மாதிரிதான்ப்பா
ஆக முடியும்ன்னு நக்கல் வேற...
SPB மாதிரி ஆகலாம்ன்னா, அவரு மாதிரி உடம்புதான்
வளருதே தவிர குரல் வந்த மாதிரி தெரியல...

அந்த மைக் மேல அப்டி ஒரு ஆசை..!!


மைக் மோகன்,மைக் முரளி படத்த எல்லாம் இதுக்காகவே
பலமுறை பாத்து இருக்கேன்.எங்க ஊரு பண்டிகை எல்லாத்துலயும்
ஆஸ்தான அறிவிப்பாளர் நான்தான்..!!
(பெரிய SUN TV, Vijay TV அறிவிப்பாளர் கூட இப்டி பந்தா பண்ண மாட்டான்)



நம்ம பாடறத காசு கொடுத்து கேக்க வேணாம்..!!
காது கொடுத்து கேக்கலாம் இல்ல..!! கேக்க மாட்டாங்க..!!
பொறமை புடிச்ச பய புள்ளைங்க..!!


இப்பல்லாம் எந்த சேனல போட்டாலும் விதவிதமா
நிறையபாட்டு போட்டிங்க நடக்குது..!!
அதுல பாடறவங்களுக்கு முதல்விதிமுறையே
நல்லா பாட தெரியுதோ இல்லையோ..??!!
பாத்துட்ருக்கறவங்க எல்லாத்தையும் நல்லா
அழுவ வைக்க தெரியணும்.
நல்லா ஓஓஓஓ...ன்னு கதறி கதறி அழுவணும்.
அப்பதான் ஏதோ டிஆர்பி ரேட்டிங் ஏறுமாம்.
அதுவும் இந்த குழந்தைங்கள இவங்க பண்ற டார்ச்சர் இருக்குதே..!!
அந்த குழந்தை போட்டில இருந்து வெளிய போறதயே ஏதோ செவ்வாய்
கிரகத்துக்கு போற மாதிரி பில்டப் பண்ணுவாங்க..!!ரொம்ப கொடுமைங்க..


குழந்தைங்க பாடறதுக்கு ஏதோ அயோத்திவழக்குக்கு
தீர்ப்பு சொல்ற மாதிரி 3 நீதிபதிகள் வேற....

"குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள் 
   மழலைச் சொல் கேளாதவர்"

அப்டின்னு வள்ளுவர் சொல்ற மாதிரி குழந்தைங்க எப்படி பாடினாலும் அழகுதான்... ஆனா,இந்த நீதிபதிங்க குடுப்பாங்க பாருங்க கமெண்ட்..!!
ரொம்ப கேவலமா இருக்கும்..!!


ஏழு கட்டை,எட்டு கட்டை -ன்னு சொல்றாங்களே நம்ம டிரை பண்ணி பாப்போம்ன்னு பாத்தா வீட்ல விறகு கட்டைய எடுத்து அடிக்க வர்றாங்க...


சாதகம்.. சாதகம்... அப்டின்னு சொல்றாங்களே..!!
நம்ம ஜாதகத்த பத்திதான் ஏதோ சொல்றாங்க போல இருக்கு அப்டின்னு ஜோசியக்காரங்ககிட்ட போனா அதுக்கு நீங்க இங்க வரக்கூடாதுங்க..!! கழுத்தளவு தண்ணியில நின்னு சரிகமபதநிச சொல்லணும்.
ஆனா,வந்ததுக்கு ஒண்ணு சொல்றேன்..
உங்களுக்கு தண்ணியில கண்டம் அப்டின்னு சொல்லி
நம்மள அடக்கிருவாங்க....


இப்டிதாங்க நிறைய பேரோட திறமை வீட்டுக்குள்ளேயே முடங்கி போச்சு..!!
நீங்கனாச்சும் உங்க பிள்ளைங்க திறமைய கண்டுபிடிச்சு அத பாராட்டுங்க..!!
அப்பா..!! எப்டியோ வெட்டியா பதிவு போடாம மெஸேஜ் சொல்லியாச்சு..!!