Sunday, May 22, 2011

பெண் படைப்பாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு


சிறந்த படைப்புகளுக்கு சன்மானம் வழங்கப்படும்

பெண்களின் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்ணியக் கருத்துக்கள் சார்ந்த, சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த எங்கள் அன்னையார் அமரர் திருமதி யோகா யோகாம்பிகை அவர்கள் புற்றுநோய் காரணமாக சென்ற ஆண்டு 2010 யூலை 18ம் நாள் தமது 55வது வயதில் காலமானார். எங்கள் அன்னையின் ஆத்மார்த்த வேண்டுகோளின் நினைவாக, ஆண்டுதோறும் நூல் வெளியீடுகளை மேற்கொள்வதென்று தீர்மானித்திருந்தோம்.

அவ்வகையில், அன்னாரின் முதல் ஆண்டு நினைவாக பெண்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் “பெண்கள் படைப்புக்களின் தொகுப்பு” ஒன்றினை வெளிக்கொணர வேண்டுமென்ற எமது ஆதங்கத்தின் பொருட்டு கவிதை, சிறுகதை, கட்டுரை, திறனாய்வு, ஓவியம் போன்ற பல்வகை ஆக்கங்களையும் பெண் படைப்பாளிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். தரமான படைப்புகளுக்கு ஊக்கிவிப்புச் சன்மானமும் வழங்கப்படும்.

ஆகையினால் சிறந்ததென நீங்கள் தீர்மானிக்கும் உங்களது (ஒன்றுக்கு மேல் இருந்தால் சிறப்பு) ஆக்கங்களை 2011 மே 31ந் திகதிக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்.

ஆக்கங்களை அனுப்பிவைப்பதற்கான முகவரிகள்:
E- mail: ranjani@bluewin.ch sasa59@bluewin.ch ag.yoga@hotmail.com

தபால் முகவரி:
Jeyaranjinee Gnanadas, 121 Hamden lane, Wellawatta, Colombo 6.
A.G.Yoharaja Mehala Hasini > Rumiweg 40, 4900 Langenthal, Switzerland.
Tel: 0041 62 923 13 11 / 0041 79 758 47 07


நூல் வெளியீடு: 2011 செப்ரம்பர் 03ம் நாள் சுவிற்சலாந்தில் இடம்பெறும். தொடர்ந்து இலங்கை, இந்தியாவிலும் மேற்கொள்ளப்படும்.

No comments: