Wednesday, July 21, 2010

தேங்காய் முடியினுள் 6 விரலுடன் மனிதக் கை அதிசயம்!


உரித்த தேங்காயில் ஆறு விரல் கொண்ட கை தோன்றிய அதிசய சம்பவமொன்று கல்முனைக்குடி மஹ்மூத் மகளிர் கல்லூரி வீதியிலுள்ள மௌலவி எம்.பி.எம்.நிசாமின் வீட்டில் நிகழ்ந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கறி சமைப்பதற்கென வீட்டுத் தென்னை மரத்தில் பிடுங்கிய தேங்காயொன்றைப் பறித்து வீட்டார் உரித்துள்ளனர்.
உரித்து முடிந்ததும் தேங்காயின் மேற்பரப்பிலுள்ள முடித்தும்பினை அகற்றியபோது ஆறு விரல் கொண்ட கை போன்ற துண்டொன்று விழுந்துள்ளது. கையின் வடிவத்தில் தேங்காயின் மூளை இருப்பதைக் கண்ட அவர் அயலவர்களுக்கு அதனைக் காண்பித்தார்.

அன்றைய தினம் இரவு வீட்டிலுள்ள குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டு காலையில் எடுத்துப் பார்த்தபோது விரல் இடுக்குகளில் காணப்பட்ட ஐஸ் படிவில் அரபு எழுத்துக்கள்கொண்ட வடிவமொன்று தோன்றியதையும் கண்டுள்ளனர். இச்செய்தி காட்டுத்தீபோல் பரவியதையடுத்து மக்கள் முண்டியடித்துக்கொண்டு பார்த்து வருகின்றனர்.

No comments: