Sunday, June 28, 2009

உறங்காத ராத்திரிகள்! - தினகரன் வாரமஞ்சரி (செந்தூரம்)



நாட்குறிப்பேட்டிலிருந்து....! - சக்தி FM (இதய ராகம்)



குழந்தையில் கிறுக்கிய சிலேட்டும்....
குச்சி பிடித்து எழுதிய மணல் மேடும்...
குறும்புகள் பல செய்த கிடுகு வேலியும்...
கிட்டிப்புள் விளையாடிய மூங்கிலும்...
நீங்காத நினைவுகளாக...!

ஓணான் பிடித்த ஈர்க்கிலும்...
குருணலில் ஆக்கிய குஞ்சி சோறும்...
கயிறுகட்டி ஓடிய சிக்குபுக்கு ரயிலும் ...
பொறுக்கித் திண்ட ஆலக்காய்களும்...
நீங்காத நினைவுகளாக...!

கடற்கரையில் மணல் வீடு கட்டியதும்...
சிறுமணலில் நண்டு துரத்திப் பிடித்ததும்...
தும்பி பிடித்து நூலில் கட்டி விட்டதும்...
நீங்காத நினைவுகளாக...!
என்றும் பசுமையோடு - எனது
நாட்குறிப்பேட்டில்....!