Friday, November 20, 2009

இயற்கையின் அபிநயம்! (சக்தி FM - இதயராகம்)


மொட்டை மாடிகள் காத்துக் கிடக்கின்றன...
வெட்டைவெளிகள் சிலிர்த்துக் கிடக்கின்றன...
பூக்கம்புகள் துருத்தி நிற்கின்றன...
வயல் வெளிகள் கம்பளம் விரித்து
வரவேற்புக்காக ஏங்கி நிற்கின்றது...

சில் வண்டுகள் அடிக்கடி சிணுங்குகின்றன...
தூக்கணாங் குருவிகள் ஊஞ்சலாடுகின்றன..
ஊசி மழைக் காட்டுக்குள்ளே
ஊர்ப்பட்ட குருவிகள் கீச்சிடுகின்றன...

மென்மையின் முரட்டுத்தனத்தால்
மேகங்கள் முட்டிக் கொள்கின்றன
கூத்தாடிகள் குறுக்கிட்டு
சூடேற்றி பறை சாற்றுகின்றனர்.
குட்டிக் குழந்தைகள் மட்டும் அழுகின்றன.

தொப்பி கழன்ற காளான்களும்
சுளுக் கெடுத்த நண்டுகளும்
வன்முறை செய்யும் ஆமைகளும்
ஆத்தோரம் அம்சமாக இருக்கின்றன.

மலையை வலை போட்ட தேயிலையும்
அணிவகுப்பு மரியாதை செய்யும் இறப்பரும்
கொள்ளை கொள்ளும்
தண்ணீர் சலவைகளும் கொள்ளை அழகு..
- ஏ.ஜே.எம். பிறவ்ஸ்

No comments: