Friday, November 13, 2009

விரக்தியின் விளிம்பில்...!


வடக்கில் இருந்தேன் யுத்தம்...
கிழக்கில் இருந்தேன் சுனாமி...
மேற்கில் இருந்தேன் கெடுபிடி.....
தெற்கில் இருந்தேன் அராஜகம்...
மத்தியில் இருந்தேன் மண்சரிவு....
வீட்டில் இருந்தேன் சண்டை....
வீதியில் வந்தேன் கலவரம்...
நாட்டில் இருப்பதும் குற்றம்...
காட்டில் இருப்பதும் குற்றம்...
இனி, செவ்வாய் கிரகம் போவதாக முடிவு!
சீ.. சீ.. அங்கும் மனிதர்கள் போய் விடுவார்கள்...
எனக்கு நிம்மதியை தருகின்ற ஒரே இடம்
எனது கல்லறைதான்...
அங்கு வந்தும் என் மேல்
சமாதியை கட்டி விடாதீர்கள்...
நான் நிம்மதியாக சுவாசிக்க வேண்டும்...

No comments: